Wednesday, September 15, 2010

வள்ளல்கள் அழியவில்லை..

தனது பதினாறு வயதுக்குரிய துள்ளும் நடையுடன் வந்து கொண்டு இருந்தான் ரவி. காற்றில் அலைபாயும் கேசம், ஒரு நொடி பார்த்த திசை மறுநொடி பார்க்காத கண்கள், காற்றில் தாளம் இடும் கைகள், பூமியை விலைக்கு வாங்கியவன் போன்று செருக்கான நடை, சினிமா பாடலை உச்சரிக்கும் உதடுகள் இப்படி அறிமுகம் செய்ய ரவி அத்தனை அதிர்ஷ்டம் செய்து இருக்கவில்லை.

பல நாள் எண்ணெய் காணாத கேசம், சோர்ந்துபோன விழிகள், நாள் முழுவது வேலை செய்து களைத்து போன கைகள், தளர்வான நடை, உறுதியான மனம் இதுதான் வாழ்க்கை அவனுக்கு கொடுத்து இருந்தது. தந்தை பக்கவாதம் வந்து படுத்த பின்னர் ஆரம்பித்த அவனது பொருள் தேடல் இன்னும் தொடர்கிறது.

நெரிஞ்சி முள்ளாய் எப்பொழுதும் அவனை வாட்டும் வறுமையை இன்று சம்பள நாள் என்ற நினைவு குருஞ்சி பூபோல் அவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி மறக்க செய்தது. நான் கிளம்பறேன் அண்ணெ. பலர் அவரை அண்ணன் என்று அழைத்தாலும் ரவியிடம் மேஸ்திரிக்கு தனி பாசம் உண்டு. எதிர்த்து பேசமாட்டான், வேலை சுத்தமாக இருக்கும், எந்த கெட்டபழக்கம் இல்லாதவன். அதனால் அவன் மேல் தனி வஞ்சையுண்டு.

சரி, இந்தா உன் சம்பளம். மேஸ்திரி கொடுத்த காசை எண்ணிபாக்காமல் சட்டை பையில் வைத்தான். அவனுக்கு மேஸ்திரி மேல் அவ்வளவு நம்பிக்கை. என்னிபாருடா என்று சொன்னவறுக்கு ஒரு புன்னகை பதிலாக கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். இன்று மளிகை கடை பாக்கி கொடுத்துவிடலாம் என்று சாலை கடக்க போனவன் கண்களிள் பட்டது அந்தா காட்சி. ஒரு முதியவர் மயங்கி கிடந்தார்.

ஓடி சென்று அவரை தூக்கினான். மூச்சி இருந்தது பக்கதில் இருந்த கடையில் இருந்து சோடா வங்கி வந்து முகத்தில் தெளித்தான். மெல்ல கண்விழித்தவரிடம் வீட்டு விலாசம் கேட்டு அவரை ஆட்டோ வைத்து அழைத்துபோய் வீட்டில் இரக்கிவிட்டான். அந்த முதியவர் நேற்றிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. பென்ஷன் வாஙக வந்து கிடைக்காமல் திரும்பி நடந்து வரும்போது மயங்கி விழுந்து இருக்கிறார். சட்டை பையில் இருந்து ஐனூறு ருபாய் எடுத்து அவர் எவ்வளவோ மறுத்தும் கேக்காமல் அவர் கையில் திணித்தான்.

மளிகை கடை அண்ணாச்சி நல்லவர். அடுத்த மாதம் தருகிறேன் என்று சொன்னால் ஒன்றும் சொல்ல மாட்டார். அம்மா திட்டும் சமாளித்து கொள்ளலாம். பூமியை விலைக்கு வாங்கியவன் போன்று செருக்காக வீடு நோக்கி நடக்க தொடங்கினான். இப்பொழுது அவன் நடையில் தளர்வு இல்லை துள்ளள் இருந்தது.கைகள் காற்றில் தாளம் போட்டது.உதடுகள் எதே சினிமா பாடலை முனுமுனுத்து கொண்டு இருந்தது.

யார் சொன்னது வள்ளல்கள் ஏழு என்று. அள்ளி கொடுத்த நேரத்தில் தன் வறுமை நினைக்காத இந்த ரவியும் ஒரு வள்ளல்தான். இது போன்ற வள்ளல்கள்தான் இன்னும் மனிதம் அழியாமல் வாழவைத்து கொண்டு இருக்கிறார்கள்.

டிஸ்கி : நேத்து வரைக்கும் நல்லாதானட இருந்த டெரர்... இன்னைக்கு இப்படி அனியாயம போய்ட்டியே.... மாலை வாங்க கூட காசு கொடுக்காம போய்டியே...

.

145 comments:

GSV said...

பூ மாலையோட வந்திருக்கேன் :) !!! பிரமாதம் ஓய் !!! உங்க குள்ள எவ்வளவு பெரிய எழுத்தாளர் ஒளிஞ்சுகிட்டு இருந்தார் அப்படிகிறது இன்னைக்குத்தான் தெரிஞ்சது.வாழ்த்துக்கள் !!!

GSV said...

டிஸ்கி://நேத்து வரைக்கும் நல்லாதானட இருந்த டெரர்... இன்னைக்கு இப்படி அனியாயம போய்ட்டியே.... மாலை வாங்க கூட காசு கொடுக்காம போய்டியே...//

உண்மையிலேயே மாலை இதுக்காக இல்லைங்கோ !!!

என்னது நானு யாரா? said...

GSV சொன்னது…
பூ மாலையோட வந்திருக்கேன் :) !!! பிரமாதம் ஓய் !!! உங்க குள்ள எவ்வளவு பெரிய எழுத்தாளர் ஒளிஞ்சுகிட்டு இருந்தார் அப்படிகிறது இன்னைக்குத்தான் தெரிஞ்சது.வாழ்த்துக்கள் !!!

நண்பர் GSV சொன்னதை அப்படியே வரவேற்கின்றேன்!

Unknown said...

unga kitta innum
ethirparkiren..

nalla erukku..

mindla vachukiren ungalai..futurela kumma vasathiya erukkum..

Jey said...

சிறுகதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டே....கலக்குடா..பாண்டி...

கதை கோர்வையா நல்லா எழுதிருக்கே...:)

dheva said...

மாப்ஸ்....புலி வலை பிடிச்சவன் கதை தெரியுமா? உனக்கு


என் கூட சேர்ந்தில்ல மாப்ஸ்... ஹா..ஹா..ஹா..! மனிதம் பத்தி நீ சொல்லியிருக்கிறது சூப்பர்.... காமெடி படம்.. இப்போ சீரியஸ் ஆகியிருக்கு.. .ஐ லவ் த சேஞ்ச்....மாப்ஸ்....கீப் இட் அப்....!

எனக்கு பிடிச்சு இருக்கு உன்னோட இந்த ஷாட்....!

அருண் பிரசாத் said...

@ அருண்...
இந்த அவமானம் உனக்கு தேவையா.... காலைல வந்தமா ஆணி புடுங்க போனோமானு இருக்காம... கொடுமைலாம் பார்த்துட்டு...

டெரர் திருந்திட்டானாம் அதை நம்புற நீ??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் என்கிற மானம் கெட்ட மானஸ்தனைக் காணவில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் என்கிற மானம் கெட்ட மானஸ்தனைக் காணவில்லை.
கண்டு பிடிப்பவர்களுக்கு டெரர் எழுதிய தமிழ் கவிதைகள் இலவசம்.

அருண் பிரசாத் said...

@ All

மக்களே... நம்பாதிங்க ஏதோ போதைல எழுதிட்டாரு... இது ஒரு எதிர் பதிவு போட்டா தான் எனக்கு தூக்கம் வரும்

செல்வா said...

நான் இதைய படிக்க மாட்டேன் ..!! எங்க TERROR திருந்தினத என்னால ஜீரணிக்க முடியல ..!! கொஞ்ச நேரம் உட்கார்ந்து அழனும் .. அழுதுட்டு வந்து படிக்கிறேன் ..!!

அருண் பிரசாத் said...

என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க... காயத்திரி சமயல் குறிப்பு எழுதுறாங்க, நீ கதை எழுதுற.... இது சரியில்லை சொல்லிட்டேன் அப்புறம்

ரமெஷ் - கவிதை
ஜெய் - சிறுகதை
நான் - சினிமா விமர்சனம்
தேவா - காமெடி
வெங்கட் - தொடர்பதிவு

எழுத ஆரம்பிச்சுடுவோம். ஜாக்கிரதை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//dheva கூறியது...


மாப்ஸ்....புலி வலை பிடிச்சவன் கதை தெரியுமா? உனக்கு
//
கொசு வலை ஓகே. அதென்ன புலி வலை. ஓ புலியை வலை போட்டுதான் பிடிப்பான்களோ?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் திருந்த போறேன்னு சொன்னப்போ.. நான் நம்பவே இல்ல...சும்மா விளையாட்டுக்கு தான் சொல்ரியோன்னு நினச்சேன்...

இனி மேல் நான் இந்த ப்ளாக் பக்கம் வரத்தையே நிப்பாட்டலாமுன்னு நினைக்கிறேன்.. நேயர் விருப்பம் என்னவோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஏழைகளுக்கு ஏழைகள் மட்டுமே உதவ முன் வருகிறார்கள்...

நல்ல கதை..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மாமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

vinu said...

maams so touchingggggggggggggggg

Kousalya Raj said...

நல்லா இருக்கு....

டிராகன் said...

நல்லாயிருக்கு மச்சி ....,தொடர்ந்து எழுது !!!!

இம்சைஅரசன் பாபு.. said...

//நேத்து வரைக்கும் நல்லாதானட இருந்த டெரர்... இன்னைக்கு இப்படி அனியாயம போய்ட்டியே.... மாலை வாங்க கூட காசு கொடுக்காம போய்டியே...//
terror மாலை வாங்கலயே ன்னு கவலை படாதே....
தேவா,சௌந்தர்,அருண் இவங்க எல்லோரும் மாலை வாங்கியாச்சு
ஜெ,பாபு மோளதுக்கு ரெடி பண்ணியாச்சு
முன்னாடி ஆடுறது ரமேஷு

அத பத்தி எல்லாம் கவலையை விடு எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்

எஸ்.கே said...

உங்கள் பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

வெங்கட் said...

நான் Blog மாறி வந்துட்டேன்னு
நினைக்கிறேன்..
போயிட்டு அப்புறம் வர்றேன்..

btw.. கதை நல்லா இருக்கு..

கருடன் said...

டாய்ய்ய்ய்ய்!!! எவண்டா அவன் நான் இல்லாத நேரம் பாத்து என் ப்ளாக் ஹேக் பண்ணி பதிவு போட்டது?? பப்ளிக்ள என்ன அடி வாங்கி வைக்க பாக்கறியா?நீயே வந்து உண்மை ஒத்துகிட்டு பதிவ அழிச்சிடு... நான் கண்டுபிடிச்சேன்...


@பொதுமக்கள்

ஆணி அதிகம். வந்து பார்மாலிட்டி பண்றேன்.

செல்வா said...

சத்தியமா அருமையான கதை அண்ணா ..!! அந்த முதல் பத்திக்கும் இரண்டாவது பத்திக்கும் இருக்குற வித்தியாசம் கலக்கல். உண்மைலேயே கலக்கல் கதை. எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியலை .. ஆனா நல்லா இருக்கு ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பூமியை விலைக்கு வாங்கியவன் போன்று செறுக்காக வீடு நோக்கி நடக்க தொடங்கினான்.//

what is meant by செறுக்காக ?

இம்சைஅரசன் பாபு.. said...

// டாய்ய்ய்ய்ய்!!! எவண்டா அவன் நான் இல்லாத நேரம் பாத்து என் ப்ளாக் ஹேக் பண்ணி பதிவு போட்டது?? //
terror உங்களேயே hack பண்ண போறாங்கோ பார்த்து ......

சௌந்தர் said...

இந்த பதிவை எங்களுக்கு கொடுத்த வள்ளல் terror வாழ்க... வாழ்க

இம்சைஅரசன் பாபு.. said...

இந்த பதிவை எங்களுக்கு கொடுத்த வள்ளல் terror வாழ்க... வாழ்க

ஏன் சௌந்தர் அடுத்தது கவிதை அப்படின்னு சொல்லி மிரட்டுறாரு terror .நீங்க வேற வாழ்க போடு உசுபேத்தி விடுறீங்க

இம்சைஅரசன் பாபு.. said...

//யார் சொன்னது வள்ளல்கள் ஏழு என்று//

இந்த மாதிரி கதைகள அள்ளி தரும் terror யும் சேர்த்து எட்டு

சௌந்தர் said...

terror இப்போ தெளிவா தானே இருக்கீங்க

சௌந்தர் said...

Kousalya கூறியது...
நல்லா இருக்கு....////

விடுங்க அடுத்து இந்த மாதிரி கதை எழுத மாட்டார்

சௌந்தர் said...

ஏன் சௌந்தர் அடுத்தது கவிதை அப்படின்னு சொல்லி மிரட்டுறாரு terror .நீங்க வேற வாழ்க போடு உசுபேத்தி விடுறீங்க////

@@@@ terror
யோவ் உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை கவிதை எழுதினா யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்க

செல்வா said...

//@@@@ terror
யோவ் உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை கவிதை எழுதினா யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்க

///

நீங்க என்ன எழுதினாலும் நான் வருவேன்.. அதனால பயப்படாம எழுதுங்க ..!!

சௌந்தர் said...

நீங்க என்ன எழுதினாலும் நான் வருவேன்.. அதனால பயப்படாம எழுதுங்க ..!////

@@@@ப.செல்வக்குமார் கூறியது...
உன்னைய மாதிரி ஆளுங்க இருப்பதால் தான் விஜய் படம் எல்லாம் வருது

செல்வா said...

//what is meant by செறுக்காக ?//

செருக்காக என்பது ஒரு தூய தமிழ் வார்த்தை .. அது உங்களைப் போன்ற சிரிப்பு போலீச்காரகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை .. அது சொன்னாலும் அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கு இன்னும் வரவில்லை .. ஆதலால் அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//terror இப்போ தெளிவா தானே இருக்கீங்க//

எங்க தெளிவா இருகார் ரெண்டு வராம தெளிவா இல்லை terror .(கழுதை)கவிதை எழுதுறாரு ,கதை எழுதுறாரு ... இன்னும் என்னவெலாம் பாக்கி இருக்கிறதோ தெரியவில்லை .எல்லோரும் சேர்ந்து அவருக்கு மஞ்சை தண்ணி தெளிச்சாதான் சரிவருவார் போல இருக்கு

கருடன் said...

சௌந்தர்
//@@@@ terror
யோவ் உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை கவிதை எழுதினா யாரும் இந்த பக்கம் வர மாட்டாங்க//

இப்போ வருது பாரு கவிதை
எழுதி இருக்கேன் ஒரு கதை
அதை படிக்கலனா உனக்கு உதை
நாலுபேரு கிட்ட நீ சொல்லு இதை.

(வந்து உங்கள கவனிக்கிறேன்.... :) )

செல்வா said...

//@@@@ப.செல்வக்குமார் கூறியது...
உன்னைய மாதிரி ஆளுங்க இருப்பதால் தான் விஜய் படம் எல்லாம் வருது

//
விசய் என்பவரின் படங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் தேவைப்படக்கூடிய கருத்துகளை சொல்லக்கூடியவை ..

சௌந்தர் said...

விசய் என்பவரின் படங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் தேவைப்படக்கூடிய கருத்துகளை சொல்லக்கூடியவை ..////

@@@@ப.செல்வக்குமார்

விஜய்யும் terror ஒன்னும் சொல்லு செல்வா கருத்து கந்த சாமி தானே

செல்வா said...

//விஜய்யும் terror ஒன்னும் சொல்லு செல்வா கருத்து கந்த சாமி தானே
//
இது மிகவும் வருந்தத் தக்கது.. அவரும் இவரும் ஒனன்றாக வாய்ப்புகள் குறைவே ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

//விஜய்யும் terror ஒன்னும் சொல்லு செல்வா கருத்து கந்த சாமி தானே//

அடப்பாவிகளா விஜய் யும் ,terror யும் ஒன்னு சேர்த்தாச்ச ?ஐயோ பாவம் terror

செல்வா said...

//இப்போ வருது பாரு கவிதை
எழுதி இருக்கேன் ஒரு கதை
அதை படிக்கலனா உனக்கு உதை
நாலுபேரு கிட்ட நீ சொல்லு இதை.//

இந்தக் கவிதைக்கு இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருவதாக அமைகிறது ..!!

அருண் பிரசாத் said...

யோவ்... டெரர் இந்த அவமானம் உனக்கு தேவையா?

அருண் பிரசாத் said...

@ செல்வா
இந்த கவிதை டி.ராஜெந்தர் கவிதை மாதிரி இருக்கு. அவருக்கு இலக்கிய வாரிசு நம்ம டெரர் தான் போல

செல்வா said...

//யோவ்... டெரர் இந்த அவமானம் உனக்கு தேவையா?
//
தாங்கள் கூறுவது எனக்கு சரியாக விளங்கவில்லை ..

(இன்னிக்கு முழுக்க நான் செந்தமிழிலேயே பேசுறது அப்படின்னு முடிவு பண்ணிட்டேன் .. யாரோ எப்படியோ போங்க ..!)

சௌந்தர் said...

இப்போ வருது பாரு கவிதை
எழுதி இருக்கேன் ஒரு கதை
அதை படிக்கலனா உனக்கு உதை
நாலுபேரு கிட்ட நீ சொல்லு இதை.////

terror ஏன் இந்த கொலை வெறி

அருண் பிரசாத் said...

//தாங்கள் கூறுவது எனக்கு சரியாக விளங்கவில்லை ..//

புலவரே! சொல்லில் குற்றமா இல்லை பொருளில் குற்றமா?

அருண் பிரசாத் said...

//terror ஏன் இந்த கொலை வெறி//

டெரர் மானஸ்தன் செத்து போய்டான், இது அவனோட கெட்ட ஆவி எழுதிய நல்ல கதை

செல்வா said...

//இந்த கவிதை டி.ராஜெந்தர் கவிதை மாதிரி இருக்கு. அவருக்கு இலக்கிய வாரிசு நம்ம டெரர் தான் போல
//
இருக்கலாம் என்றே தோன்றுகிறது .. ஆனால் நமது Terror அண்ணாவைப் பார்த்து தான் டி.ராஜேந்தர் அவர்களே கற்றுக்கொண்டதாக ஒரு பெட்டியில் தெரிவித்துள்ளார்கள் ..!!

கருடன் said...

@அருண்
//யோவ்... டெரர் இந்த அவமானம் உனக்கு தேவையா?//

எனக்கு வேண்டாம் மச்சி!! நீ எடுத்துகோ.... உனக்கு இல்லாததா?

அருண் பிரசாத் said...

50

செல்வா said...

50

இம்சைஅரசன் பாபு.. said...

இந்த கவிதை டி.ராஜெந்தர் கவிதை மாதிரி இருக்கு. அவருக்கு இலக்கிய வாரிசு நம்ம டெரர் தான் போல

T .ராஜேந்தரின் இல்லகிய வாரிசு terror வாழ்க........வாழ்க..........

அருண் பிரசாத் said...

சிங்கமா இருந்த எங்க டெரரை இப்படி சந்தி சிரிக்க வெச்சுடானுங்களே!

அருண் பிரசாத் said...

யோவ்... எத்தனை பேருயா 50 போடுவீங்க.... என் 50 யே போங்கு 50. செல்வா நீ வேறயா

செல்வா said...

//யோவ்... எத்தனை பேருயா 50 போடுவீங்க.... என் 50 யே போங்கு 50. செல்வா நீ வேறயா
//
நான் ஏமாந்து விட்டது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது ..!!

அருண் பிரசாத் said...

///நான் ஏமாந்து விட்டது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது ..!!//

செல்லாது செல்லாது 50 என்பதை தமிழ்ல எழுது

செல்வா said...

செல்லாது ஐம்பது.!

செல்வா said...

இங்கே யாரும் இருப்பது போன்று தெரியவில்லை .. ஆதலால் நானும் கிளம்புவதென்று முடிவெடுத்து விட்டேன் ..!!

அருண் பிரசாத் said...

//செல்லாது ஐம்பது.!//

இதுவும் செல்லாது

ரு0

இப்படி போடனும்

செல்வா said...

//ரு0

இப்படி போடனும்

//
இதில் செல்லாது என்ற வார்த்தை இடம்பெறவே இல்லையே ..?!
ஆதலால் தாங்கள் கூறுவதும் தவறானதே ..!!

பாரதசாரி said...

//இப்படி அறிமுகம் செய்ய ரவி அத்தனை அதிர்ஷ்டம் செய்து இருக்கவில்லை//
சட்டென நிமிரச்செய்த வரிகள்! அந்த அதிர்ஷ்டத்தை கதையின் கடைசியில் அவன் பெற்றது மிக மிக அருமை!! மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்!!!!!

கருடன் said...

@GSV
//பூ மாலையோட வந்திருக்கேன் :) !!! பிரமாதம் ஓய் !!! உங்க குள்ள எவ்வளவு பெரிய எழுத்தாளர் ஒளிஞ்சுகிட்டு இருந்தார் அப்படிகிறது இன்னைக்குத்தான் தெரிஞ்சது.வாழ்த்துக்கள் !!!//

ஆமாம் சார். வாடகை கூட கொடுக்காம ஒளிஞ்சிட்டு இருந்தார் அதான் இழுத்து வெளிய கிடாசிட்டேன். வாழ்த்துக்கு நன்றி. மாலையும் உங்களுக்கே

கருடன் said...

@என்னது நானு யாரா? கூறியது...
//நண்பர் GSV சொன்னதை அப்படியே வரவேற்கின்றேன்!//

நண்பர் GSVக்கு சொன்னதை உங்களுக்கு அப்படியே ரிப்பிட்டு... நன்றி பங்காளி.

கருடன் said...

@siva
//mindla vachukiren ungalai..futurela kumma vasathiya erukkum.//

பார்ர இந்த கொழந்தபுள்ள நம்மள கும்ம திட்டம் போடுது.

கருடன் said...

@Jey
//சிறுகதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டே....கலக்குடா..பாண்டி...

கதை கோர்வையா நல்லா எழுதிருக்கே...:)//

அட நீங்க சீக்கிறம் வாங்க. பலபேர கும்மனூம். இல்லை அடுத்து நான் கவிதை, கட்டுரை இப்படி வீனா போய்டுவேன். நன்றி தல!! :))

கருடன் said...

@dheva சொன்னது…
//என் கூட சேர்ந்தில்ல மாப்ஸ்... ஹா..ஹா..ஹா..! மனிதம் பத்தி நீ சொல்லியிருக்கிறது சூப்பர்.... காமெடி படம்.. இப்போ சீரியஸ் ஆகியிருக்கு.. .ஐ லவ் த சேஞ்ச்....மாப்ஸ்....கீப் இட் அப்....!

எனக்கு பிடிச்சு இருக்கு உன்னோட இந்த ஷாட்....!//

மாப்ஸ் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு. நக்கல் பண்றது மூச்சி விடற மாதிரி சுலபம். நல்ல விஷயம் எழுதறது மூச்சி அடக்கற மாதிரி ரொம்ப கஷ்டம். இப்பொ நான் என்ன சொல்ல வரேன் புரியுதா? இல்லைனா அடுத்த பதிவுள இதை ப்ற்றி நான் விளக்கறேன். நன்றி மாப்ஸ்....

கருடன் said...

@ அருண்...
//டெரர் திருந்திட்டானாம் அதை நம்புற நீ??//

என்னாதூதுதூ.... சூரியன் மேற்குல உதிக்குதா?? சொல்லவேயில்ல..

கருடன் said...

@ரமேஷ்
//டெரர் என்கிற மானம் கெட்ட மானஸ்தனைக் காணவில்லை.
கண்டு பிடிப்பவர்களுக்கு டெரர் எழுதிய தமிழ் கவிதைகள் இலவசம்//

இந்த கவிதை உங்கள் அன்புக்கு பரிசு

சிரிச்சிட்டு போகுது சில்பான்ஸு
சிரிக்காம போகுது டவுன் பஸு
வேடிக்கை பாக்குது ஆம்புலன்ஸு
இதுதாண்டா உலகம் போலிஸு!!

கருடன் said...

@அருண்
//மக்களே... நம்பாதிங்க ஏதோ போதைல எழுதிட்டாரு... இது ஒரு எதிர் பதிவு போட்டா தான் எனக்கு தூக்கம் வரும்//

ஆமாம். கூப்பிடுங்க முரளி சார. எழுத சொல்லுங்கள் எதிர் பதிவு....

கருடன் said...

@ப.செல்வக்குமார்
//என்னால ஜீரணிக்க முடியல ..!!//

எண்டா நான் என்ன உனக்கு இங்க சிக்கன் பிரியானியா போடறேன்?

// கொஞ்ச நேரம் உட்கார்ந்து அழனும் .. அழுதுட்டு வந்து படிக்கிறேன் ..!!//

இப்பொ நீ அழு. படிச்சி முடிச்சதும் உன்ன படுக்க வச்சி ஊரே அழும். நம்ம கதை பவர் அப்படி....

கருடன் said...

@அருண்
//ரமெஷ் - கவிதை
ஜெய் - சிறுகதை
நான் - சினிமா விமர்சனம்
தேவா - காமெடி
வெங்கட் - தொடர்பதிவு//

இதுக்கு நீ என்ன அணக்கோண்டா கால் கீழ போட்டு கொண்ணுடலாம்.

கருடன் said...

ரமேஷ்
//ஓ புலியை வலை போட்டுதான் பிடிப்பான்களோ?//

இல்லை புளிப்பு முட்டாய் வாங்கி கொடுத்து பிடிப்போம்.

கருடன் said...

@வெறும்பய
//இனி மேல் நான் இந்த ப்ளாக் பக்கம் வரத்தையே நிப்பாட்டலாமுன்னு நினைக்கிறேன்.. நேயர் விருப்பம் என்னவோ.//

நீ பதிவுளகம் பக்கம் வரதை நிப்பாட்டினா இன்னூம் சந்தேஷம்....

கருடன் said...

@வெறும்பய
//ஏழைகளுக்கு ஏழைகள் மட்டுமே உதவ முன் வருகிறார்கள்...//

போன கமெண்ட் நல்லா சொல்லி இருந்த இப்பொ கண்றாவியா கருத்து சொல்லி இருக்க??

கருடன் said...

@பனங்காட்டு நரி
//மாமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமுமு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

எண்டா என்னாச்சி?? கரண்ட் கம்பி எதாவது மிதிச்சிட்டியா??

கருடன் said...

@vinu
//maams so touchingggggggggggggggg//

ரைட்டு விடு மச்சி!!!

கருடன் said...

@Kousalya
//நல்லா இருக்கு....//

வாங்க கௌசல்யா! ரொம்ப பெரிய கமெண்ட் போட்டு இருக்கிங்க :))) வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

கருடன் said...

@shankar
//நல்லாயிருக்கு மச்சி ....,தொடர்ந்து எழுது !!!//

நீ அவனா? எனக்கு இந்த பெயர்ல ஒரு ஆள் தெரியும். அவனா இல்லைனா கருத்துக்கு நன்றி. அவனா இருந்தா... எண்டா இந்த கொலைவெறி....

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@Kousalya
//நல்லா இருக்கு....//

வாங்க கௌசல்யா! ரொம்ப பெரிய கமெண்ட் போட்டு இருக்கிங்க :))) வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி////

@@@@கௌசல்யா உங்களை கிண்டல் பண்றார் உனக்கே இப்போ தான் ஒரு தாய்குலம் வந்து இருக்கு இனி வர மாட்டாங்க மக்கா

கருடன் said...

@இம்சைஅரசன் பாபு
//terror மாலை வாங்கலயே ன்னு கவலை படாதே....
தேவா,சௌந்தர்,அருண் இவங்க எல்லோரும் மாலை வாங்கியாச்சு
ஜெ,பாபு மோளதுக்கு ரெடி பண்ணியாச்சு
முன்னாடி ஆடுறது ரமேஷு//

ரோஜா மாலைதான? ரமேஷ்கிட்ட சொல்லி பரத நாட்டியம் ஆட சொல்லு. சரியா?

கருடன் said...

@எஸ்.கே
//உங்கள் பதிவுகளிலேயே மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.
மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!//

எதோ பழைய பகை மனசுல வச்சி இருக்கிங்க தெரியுது. நன்றி எஸ்.கே :))

கருடன் said...

@வெங்கட்
//நான் Blog மாறி வந்துட்டேன்னு
நினைக்கிறேன்..
போயிட்டு அப்புறம் வர்றேன்..

btw.. கதை நல்லா இருக்கு..//

ஆமாம். நானூம் என் ப்ளாக்தான் தேடிட்டி இருக்கேன். அட்ரஸ் கிடைச்சா சொல்லி விடுங்க. நன்றி தல.

கருடன் said...

@ப.செல்வக்குமார்
//சத்தியமா அருமையான கதை அண்ணா ..!! அந்த முதல் பத்திக்கும் இரண்டாவது பத்திக்கும் இருக்குற வித்தியாசம் கலக்கல். உண்மைலேயே கலக்கல் கதை. எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியலை .. ஆனா நல்லா இருக்கு ..//

என்னாம பீல்பண்ணி படிச்சி இருக்கடா. நீதாண்டா உண்மையான ரசிகன். இந்த சௌந்தர் பையன் சும்மா...

கருடன் said...

@ரமேஷ்
//what is meant by செறுக்காக ?//

நீ இப்படி குறுக்கால கேள்வி கேட்டு கெக்கெ பிக்கேனு சிரிக்கிற இல்லை. அதான்.

கருடன் said...

@இம்சைஅரசன் பாபு..
//terror உங்களேயே hack பண்ண போறாங்கோ பார்த்து ......//

உனக்கு நல்லா காமெடி வருது மக்கா. ட்ரை பண்ணு.

கருடன் said...

சௌந்தர்
//இந்த பதிவை எங்களுக்கு கொடுத்த வள்ளல் terror வாழ்க... வாழ்க//

இந்த பதிவ பாத்த (எப்படியும் படிச்சி இருக்க மாட்ட) நீயும் வாழ்க! வாழ்க!!

கருடன் said...

@இம்சைஅரசன் பாபு..
//இந்த மாதிரி கதைகள அள்ளி தரும் terror யும் சேர்த்து எட்டு//

மக்கா!! இது நான் எழுதி கொடுக்கல. நீயா பீல் ப்ண்ணிட்டு எக்ஸ்ட்ரா காசு கேக்காத சொல்லிட்டேன்.

கருடன் said...

@சௌந்தர்
//terror இப்போ தெளிவா தானே இருக்கீங்க//

கொழம்பி போக நான் என்ன குளமா?

கருடன் said...

@சௌந்தர்
//விடுங்க அடுத்து இந்த மாதிரி கதை எழுத மாட்டார்//

பயபுள்ளைங்க எல்லா முடிவும் அவங்களே எடுக்கறானுங்க. அது சரி ஆட்ட கேட்டா வெட்டுவாங்க. நடக்கட்டும்.

கருடன் said...

@சௌந்தர்
//விடுங்க அடுத்து இந்த மாதிரி கதை எழுத மாட்டார்//

பயபுள்ளைங்க எல்லா முடிவும் அவங்களே எடுக்கறானுங்க. அது சரி ஆட்ட கேட்டா வெட்டுவாங்க. நடக்கட்டும்.

கருடன் said...

ப.செல்வக்குமார்
//நீங்க என்ன எழுதினாலும் நான் வருவேன்.. அதனால பயப்படாம எழுதுங்க ..!!//

நாம என்னைக்குடா பயந்தோம். நம்ம எழுதரத பாத்து அடுத்தவந்தான் பயப்படனூம்.

கருடன் said...

@இம்சைஅரசன் பாபு..
//எல்லோரும் சேர்ந்து அவருக்கு மஞ்சை தண்ணி தெளிச்சாதான் சரிவருவார் போல இருக்கு//

தூங்கற சிங்கத்த தட்டி எழுப்பாத மக்கா!!! அப்புறம் அது வேற இடத்துல போய் படுத்து தூங்கும்.

கருடன் said...

ப.செல்வக்குமார்
//விசய் என்பவரின் படங்கள் தமிழக மக்களுக்கு மிகவும் தேவைப்படக்கூடிய கருத்துகளை சொல்லக்கூடியவை//

ஆமாம். நம்மள மாதிரி.

கருடன் said...

@இம்சைஅரசன் பாபு..
//அடப்பாவிகளா விஜய் யும் ,terror யும் ஒன்னு சேர்த்தாச்ச ?ஐயோ பாவம் terror//

வித்தியாசம் இருக்கு மக்கா!! அவன் காசு வாங்கிட்டு போடுவான் நான் காசு வாங்காம மொக்க போடுவேன்...

கருடன் said...

@ப.செல்வக்குமார்
//இந்தக் கவிதைக்கு இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருவதாக அமைகிறது ..!!//

அப்படியே ஆஸ்கர்ல இரண்டு பீஸ் சொல்லிடு...

கருடன் said...

@அருண் பிரசாத் சொன்னது…
//இந்த கவிதை டி.ராஜெந்தர் கவிதை மாதிரி இருக்கு. அவருக்கு இலக்கிய வாரிசு நம்ம டெரர் தான் போல///

டாய்ய்ய்!! அவன் பேரு சிம்பு
என்கிட்ட வச்சிக்காத வம்பு

கருடன் said...

@சௌந்தர் சொன்னது…
//இப்போ வருது பாரு கவிதை
எழுதி இருக்கேன் ஒரு கதை
அதை படிக்கலனா உனக்கு உதை
நாலுபேரு கிட்ட நீ சொல்லு இதை.

terror ஏன் இந்த கொலை வெறி//

உங்கள எல்லாம் கொல்லதான்.

கருடன் said...

@அருண்
//டெரர் மானஸ்தன் செத்து போய்டான், இது அவனோட கெட்ட ஆவி எழுதிய நல்ல கதை//

அட பாவி நீகூடவா இதை கதைனு நம்பிட்ட....

கருடன் said...

100

கருடன் said...

@ப.செல்வக்குமார்
//இருக்கலாம் என்றே தோன்றுகிறது .. ஆனால் நமது Terror அண்ணாவைப் பார்த்து தான் டி.ராஜேந்தர் அவர்களே கற்றுக்கொண்டதாக ஒரு பெட்டியில் தெரிவித்துள்ளார்கள் .//

அந்த பழியும் என் மேலதானா??

கருடன் said...

இம்சைஅரசன் பாபு
//T .ராஜேந்தரின் இல்லகிய வாரிசு terror வாழ்க........வாழ்க......//

இளைய வாரிசு பாபு வாழ்க!!

கருடன் said...

@அருண்
//சிங்கமா இருந்த எங்க டெரரை இப்படி சந்தி சிரிக்க வெச்சுடானுங்களே!//

அவ யாரு மச்சி சந்தி? சாந்திக்கு தங்கச்சி முறையா? பிகர் சிரிச்சா பிக்கப் பண்ணனும். பீல் ஆககூடடு. சரியா??

கருடன் said...

@பாரதசாரி…
//சட்டென நிமிரச்செய்த வரிகள்! அந்த அதிர்ஷ்டத்தை கதையின் கடைசியில் அவன் பெற்றது மிக மிக அருமை!! மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்!!!!//

வாழ்க்கை கொடுக்காத சந்தோஷத்த அவன் வள்ளல் தண்மையால் பெற்றான். இதைதான் நான் கடைசில சொல்லாமல் சொல்லி இருக்கேன். அதை சரியாக உணர்ந்து பாரட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.

அனு said...

Terrorன் Error பதிவா இது??

கருடன் said...

@சௌந்தர் சொன்னது…
//@@@@கௌசல்யா உங்களை கிண்டல் பண்றார் உனக்கே இப்போ தான் ஒரு தாய்குலம் வந்து இருக்கு இனி வர மாட்டாங்க மக்கா//

என் மக்கா? அவங்க அவ்வளவு கோவகாரங்களா??? இல்லை நீ இப்படி அவங்கள பற்றி புரளி கிளப்பிவிடறியா?

(ஒரு வேலை கண்டன பதிவு - 4 எழுதி நம்மள திட்டுவாங்களோ!!!) :)

கருடன் said...

@அனு
//Terrorன் Error பதிவா இது??//

இல்லிங்க அனு. Error இடையில் Terrora ஒரு பதிவு.... :))

(இப்படி படிங்க... அடுத்தவங்க பண்ற Error நக்கல் பண்ற பதிவுக்கு இடையில் Terrora சொந்தமா சிந்திச்சி எழுதின ஒரு பதிவு)

NS Manikandan said...

நல்ல கருத்து..வாழ்த்துக்கள்

உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com/
- கலக்கல் கலந்தசாமி

Gayathri said...

என்ன டெரர் சார் கத எழுதுறீங்களா.வாழ்த்துக்கள்

கருடன் said...

@கலக்கல் கலந்தசாமி
//நல்ல கருத்து..வாழ்த்துக்கள்

உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை
http://nsmanikandan.blogspot.com///

நன்றி!! போய் உங்க வலைபதிவ பாத்தாச்சி..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

கருடன் said...

@Gayathri
//என்ன டெரர் சார் கத எழுதுறீங்களா.வாழ்த்துக்கள்//

ஆமாங்க காயத்ரி. நீங்க சமையல் குறிப்பு எழுத மாட்டேன் சத்தியம் பண்ணா நானூம் இனி கதை எழுத மாட்டேன்.... :)

S.Visvanathan said...

Nice Story na..... Super....

கருடன் said...

@S.Visvanathan
//Nice Story na..... Super....//

மிக்க நன்றி!! தொடர்ந்து வாங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது.....சாரி சார் கடை மாறி வந்துட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி நல்லாத்தான்யா எழுதியிருக்கே!

கருடன் said...

@பன்னிக்குட்டி
//என்னது.....சாரி சார் கடை மாறி வந்துட்டேன்!//

யோ ராம்ஸ் இருயா.. இது நம்ம வீடுதான். லைட்டா வாஸ்த்துபடி மாத்தி இருக்கேன். உள்ள வா.

//தக்காளி நல்லாத்தான்யா எழுதியிருக்கே!//

அப்படின்ற? ரைட்டு... அடுத்து கவிதை. தலைப்பு ”பன்னிகுட்டி பரதநட்டியம்”

GSV said...

me the last ...he he he

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@S.Visvanathan சொன்னது…
Nice Story na..... Super....

//

ஆமாங்கோ// நானும் ரிப்பீட்டரேன்...

கருடன் said...

@பட்டாபட்டி.. சொன்னது…
//@S.Visvanathan சொன்னது…
Nice Story na..... Super..../



ஆமாங்கோ// நானும் ரிப்பீட்டரேன்..//

பட்டா ரிப்பீட்டனதுதான் ரிப்பீட்ட... எல்லாதுகும் மேல ஒரு புள்ள ரொம்ப பீல் பண்ணி இருக்கே அத்த ரிப்பீட்டி இருக்கலாம் இல்ல.... நானூம் ஊருக்குள்ள பிரபலபதிவர்னு ஊளை இட்டுட்டு சாரி சொல்லிட்டு திறிவேன் இல்ல....

கருடன் said...

@GSV சொன்னது…
//me the last ...he he he//

லாஸட் இல்லையே லாஸ்ட் இல்லையே!!!

சாமக்கோடங்கி said...

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம், தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை..

கருடன் said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது...
//நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம், தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.//

புலவர்ங்க நீங்க... :) . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரகாஷ்....

முத்து said...

இங்க terror ஒருத்தர் இருந்தாரே அவரு எங்க?

NS Manikandan said...

கதை மிகவும் அருமை..நல்லா இருக்கு

Gayathri said...

என்ன ப்ரோ கதைலாம் எழுதுறீங்க??? கலக்கலா இருக்கு

கருடன் said...

@Gayathri
//என்ன ப்ரோ கதைலாம் எழுதுறீங்க??? கலக்கலா இருக்கு//

ஹலோ 911 ஆம்புலன்ஸ் சர்விஸா? இங்க ஷார்ஜாக்கு ஒரு ஆம்புல்ன்ஸ் அனுப்ப முடியுமா?? பேஷண்ட் பெயர் காயத்ரி. இந்தியா போய்ட்டு வந்து ஒரு மாதிரி ஆகிட்டாங்க. Short Term Memory Loss மாதிரி தெரியுது....


(என்னா சகோ அப்போ இந்த கமெண்ட் போட்டது யாரு??

Gayathri சொன்னது…
என்ன டெரர் சார் கத எழுதுறீங்களா.வாழ்த்துக்கள்
16 செப்டெம்ப்ர், 2010 12:51 am )

Gayathri said...

நான் தான் ப்ரோ..பின்னூட்டம் போட்டாத மறந்துட்டேன்..ஹிஹி

கருடன் said...

@Gayathri

//நான் தான் ப்ரோ..பின்னூட்டம் போட்டாத மறந்துட்டேன்..ஹிஹி//

பாவம் உங்க ரங்கமணி...

பெசொவி said...

சாரி, டெரர், கொஞ்சம் லேட்டாதான் வந்திருக்கேன். கதை ரொம்ப சூப்பர்! ஏழையின் வறுமை ஏழைக்கு மட்டுமே புரியும் என்பதை ஒரு சிறு கதையில் கூறியுள்ளீர்கள், மிகவும் அருமை.

கருடன் said...

@முத்து
//இங்க terror ஒருத்தர் இருந்தாரே அவரு எங்க?//

வந்ததே லேட்... இதுல மூனாவது மனுஷன் மாதிரி கூட்டத்துல ஒளிஞ்சிட்டு கொரல் கொடுக்கர....

கருடன் said...

@கலக்கல் கலந்தசாமி கூறியது...
//கதை மிகவும் அருமை..நல்லா இருக்கு//

வாங்க பிரதர்... கருத்துக்கு மிக்க நன்றி...

கருடன் said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை
//சாரி, டெரர், கொஞ்சம் லேட்டாதான் வந்திருக்கேன். கதை ரொம்ப சூப்பர்! ஏழையின் வறுமை ஏழைக்கு மட்டுமே புரியும் என்பதை ஒரு சிறு கதையில் கூறியுள்ளீர்கள், மிகவும் அருமை.//

அட விடுங்க பெ.சொ.வி. நீங்க எல்லாம் நம்ம ஜனங்க.. நீங்க எல்லாம் வந்தாலே சந்தோஷம். ஆன நானும் கதை எழுதரேன் சொல்லி எதோ கிறுக்கி இருக்கேன். உங்கள மாதிரி மேதைகள் கருத்து எல்லாம் கண்டு பிடிச்சி சொல்லும்போது நான் ஷாக் ஆகிடறேன்.... :))))

thiyaa said...

super

கருடன் said...

@தியாவின் பேனா கூறியது...
//super//

நன்றி தியா. உங்க பேனாவுக்கும் நன்றி!!!

thiyaa said...

கலக்கல் கதை

Unknown said...

heyyyyyyyyyyyy

nanthan firstu...

eppudi...

Anonymous said...

இங்க..குறைந்தபட்ச கமெண்டே 100 தானா..

Anonymous said...

தனது பதினாறு வயதுக்குரிய துள்ளும் நடையுடன் வந்து கொண்டு இருந்தான் ரவி. காற்றில் அலைபாயும் கேசம், ஒரு நொடி பார்த்த திசை மறுநொடி பார்க்காத கண்கள், காற்றில் தா//
பின்னூட்ட வள்ளல் அருமையான வர்ணணை

கருடன் said...

@தியாவின் பேனா
//கலக்கல் கதை//

Thanks Dhiya... thanks to Dhiya pen also...

(u put one english i put one english. u put one tamil i put one tamil :)

கருடன் said...

@siva
//heyyyyyyyyyyyy

nanthan firstu...

eppudi...//

நீ ஏன் இனம் ராசா உன் பிளாக் தவிற எல்லா இடத்துலயும் எழுதர...

கருடன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்
//இங்க..குறைந்தபட்ச கமெண்டே 100 தானா..//

ஆமாம். பதிவ பத்தி 10 மீதி எல்லாம் இந்த பண்னாடைங்க (என்னையும் சேர்த்துதான்) கும்மி


//பின்னூட்ட வள்ளல் அருமையான வர்ணணை//

இந்த நக்கல்தான் வேண்டாம் சொல்ரது.. நீங்க வந்தது மொய் திருப்பி செய்ய...

அன்பரசன் said...

கதை சூப்பர்..
:) :) :)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

படத்த மாத்துடா டெர்ரர் ...,மச்சி அடுத்து ஒரு புனைவு எழுது ..,நேயர் விருப்பம் ...,நம்ம ஜெய் வர்ணிசி ஒரு புனைவு எழுது

கருடன் said...

@அன்பரசன் சொன்னது…
//கதை சூப்பர்..
:) :) :)//

நன்றி சார்....

கருடன் said...

@பனங்காட்டு நரி
//படத்த மாத்துடா டெர்ரர் ...,மச்சி அடுத்து ஒரு புனைவு எழுது ..,நேயர் விருப்பம் ...,நம்ம ஜெய் வர்ணிசி ஒரு புனைவு எழுது//

தேங்ஸ்டா மச்சி!! எனக்கு ஒரு ப்ளாக் இருக்க விஷயமே மறந்து போச்சி. உன் கமெண்ட் மொயில் பாத்து பதறி போய் ஓடி வரேன்...புது பதிவு போட்டுடலாம்...

(ஜய் நம்ம ஆளு மச்சி... வேற பீஸ் சொல்லு போட்டு தள்ளிடுவோம்...)