Friday, September 23, 2011

காதல் பதிவர்கள் - புரியாத புதிர்

முஸ்கி : உண்மையாவே சந்தேகம். அதான் ப்ளாக்க தூசி தட்டிட்டேன். இது அதிகபிரசங்கிதனம் தான் இருந்தாலும் சந்தேகம்னு வந்தா கேட்டுடனும். நான் மட்டும் தான் இப்படி எல்லாம் எழுதரேன் அதனால என்னை தான் சொல்லி இருக்க அப்படினு குதிக்காதிங்க செல்லம்ஸ். உங்களை மாதிரி நிறைய பேரு இருக்காங்க. ஓவர் டூ டாப்பிக்.

லிவ்விங் டூகெதர்ல ஒரு பொண்ணும் பையனும் பிடிச்சி ஒன்னா இருந்தா தப்பு அப்படினு நாம எல்லாம் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டோம். ஆனா நம்மள சேர்ந்த பல பேரு கலை, கவிதை, ரசனை, இலக்கியம் சொல்லி அதைவிட மோசமா எழுதலாமா. அவங்க வீட்டுகுள்ள செய்யரத எல்லாம் நாம கடை போட்டு விக்கரோம்.

கவிதைன்னு சொல்லி காமத்த கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தரிங்க. என்னனனன.. வார்த்தையில் வர்ணம்பூசி அதோட வக்கரத்தை குறைத்து காட்டறிங்க. பொண்ணு எழுதினா பையனும் பையன் எழுதினா பொண்ணுங்களும் ஆஹா.. அருமை அப்படின்னு வெக்கபட்டுகரிங்க. என்ன சார்? காமம் வாழ்வில் ஒரு பாகம் அதை ஏன் மறைக்கனும் அப்படினு கேக்கரிங்களா? அப்போ நாளைக்கு எல்லாரும் டெய்லி நைட் வீட்டுல நடக்கரத வீடியோ பிடிச்சி பாருங்க நான் காதலை எப்படி பொழியரேன்னு கடை வைப்பிங்களா? உங்களுக்குன்னு சில விஷயங்கள பர்சனலா வச்சிக்க மாட்டிங்களா?

கோபத்தின் உச்சியில் இருந்த என் காதலியின் இதழ்களை தடவி பின்னர் அவள் கழுத்தில் விரல்களால் கோலம் வரைந்து அங்கிருந்து கீழ் நோக்கி....... இப்படின்னு புள்ளி வச்சி நிறுத்தரிங்களே அப்படினா படிக்கரவங்களும் அதோட கற்பனை நிறுத்திபாங்களா இல்லை அதுக்கு மேல அவங்க யோசிக்கனும் அப்படினு தான் நீங்க எல்லாம் எழுதரிங்களா? பசங்க எழுதரதுகூட பரவாயில்லை போல சில பொண்ணு கவிதையா பேசரேன் சொல்லி முகம் சுளிக்கிர மாதிரி எழுதரது இருக்கே.. அப்பா சாமி... அதிலும் சில பொண்ணு, பையன் கோவமா எழுதர அப்போ தான் அவங்க மனசுல எவ்வளவு வக்கரம் இருக்குனு தெரியும். என்னாங்க சார்/மேடம் நீ மட்டும் என்ன எழுதி கிழிக்கிறியா? நான் ஒன்னும் நல்லவன், நல்லவள் அப்படினு போர்வை போத்திட்டு எழுதலையே சார் / மேடம். 

பிடிச்சா படி இல்லைனா மூடிகிட்டு போ அப்படினு ஒரு மொக்கையா பதில் சொல்லாதிங்க. நீங்க நல்லா எழுதறிங்க அப்படினு நம்பிதான உங்களை பின் தொடர்கிறோம். ஆனா நீங்க அப்போ அப்போ இது மாதிரி பண்ணா எப்படிங்க? ஆண் பதிவர்களே உங்களை பின்தொடரும் பெண் பதிவர்களை மட்டும் மனசுல வச்சி எழுதாதிங்க. பெண் பதிவர்களே உங்களை பின்தொடரும் ஆண் பதிவர்களுக்கா மட்டும் எழுதாதிங்க. சில பேரு குறிபிட்ட சிலருக்காக ப்ளாக் எழுதராங்க அவங்களை விட்டுடலாம்.

இந்த பதிவு போட்டதால காதல் கவிஞர்கள் (இருபாலரும்) செயற்குழு கூட்டி என்னை கிழி கிழின்னு கிழிப்பிங்க. பரவாயில்லைங்க, ஆனா கொஞ்சம் டீசண்டா கிழிங்க. இதே பதிவை நடை மாத்தி எழுத ரொம்ப நேரமாகாது. உன்கூட இருக்கவனும் தான் அப்படி எல்லாம் எழுதரான் சொல்லுவிங்க. இது அவனுங்களுக்கும் சேர்த்துதான்... :)

டிஸ்கி : இதை உங்களோட ஒரு நேர்மையான ரசிகனின் அதங்கமா எடுத்துக்கரதும் இல்லை உங்களை எல்லாம் வம்பு இழுக்கரதா நினைச்சி பொங்கி எழரதும் உங்கள் விருப்பம். நன்றி!!

.