Friday, August 17, 2012

வாழ்கை வாழ்வதற்கே


மக்களே!! ஊர்ல எவனாவது உங்களை பார்த்து தண்ணி அடிக்காத, தம் அடிக்காத, பொண்ணுங்க பின்னாடி சுத்தாத இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணா காறி மூஞ்சி மேலே துப்பிட்டு போய் உங்க வேலையை பாருங்க உங்க அப்பா சொன்னா மட்டும் காதில் வாங்காம போய்டுங்க. இல்லைனா அடுத்த வேலை சோறு கிடைக்காது.

ஒரு அனுபவபட்ட அறிவாளி சொல்ரேன். இருப்பது ஒரு வாழ்கை. அதை சந்தோஷமா வாழுங்க. எல்லாம் அளவோட இருக்கவரை எதுவும் தப்பில்லை. மாசத்துக்கு ஒரு நாள் மூச்சி முட்ட குடிச்சிட்டு வாந்தி எடு. அப்போ அப்போ ஒரு தம் அடி. எவ்வளவு பொண்ணுங்க கூட சுத்த முடியுமோ சுத்து. ஆனா எதிலும் அடிமையாகிடாதிங்க. 

இதை உன் கேர்ள் பிரண்டுகிட்ட சொன்னா அவன் கிடக்கரான் பொறுக்கி. நீ தான் கிரேட் அப்படினு சொல்லுவாங்க. ஆனா நாளைக்கு என்ன வேணா நடக்கலாம். ”சாரி டா எங்க வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை” அப்படினு சொல்லிட்டு அந்த புள்ளை ஒரு நல்ல லைப்ல செட்டிலான பையனா பார்த்து கட்டிகிட்டு (நல்லா கவனி மகனே அவன் லைப்ல செட்டிலாகி இருக்கனும் அதான் முக்கியம்.) அதுக்கு அடுத்த நாள் “டேக் கேர் டா உன் நல்ல மனசுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா. ஐயம் அன்லக்கி” அப்படினு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டு அதோட உன் அத்தியாயத்த மூடி வச்சிட்டு ஹனி மூன் போய்டுவா. நீ அந்த எஸ்.எம்.எஸ் பார்த்து பார்த்து புல்லரிச்சி போவ. அவ ஒரு புள்ளையை பெத்துட்டு வந்து “சம் வாட் லைப் கோயிங் டா. ஸ்டில் ஐ ரிமம்பர் யூ” அப்படினு அடுத்த எஸ்.எம்.எஸ் போடுவா. நீ அதை வச்சி பார்த்து பார்த்து அடுத்த நாலு வருஷம் நாசமா போவ.

என்னைக்காவது ஒரு நாள் அந்த புள்ளை வீட்டுகாரன் மூக்கு முட்ட குடிக்கிரத பார்த்துட்டு என்ன உன் புருஷன் குடிக்கிராரு. உனக்கு தான் தண்ணி அடிச்சா பிடிக்காதே கேட்டு பாரு. "ச்சீ ச்சீ நீ நினைக்கிர மாதிரி எல்லாம் இல்லைடா அவரு ஒரு Social Drinker" அப்படினு பதில் வரும். அப்போ தான் நீ லைட்டா யோசிப்ப “நாமளும் அப்போ அப்போ லைட்டா குடிச்சி இருக்கலாமோ” அப்படினு. 

இது சும்மா பிகரை வச்சி சொன்ன உதாரணம் (அப்போ தான் உன் மண்டையில் சட்டுனு உரைக்கும்). நண்பர்கள், சொந்தகாரன், மேனேஜர், அண்ணன், தம்பி இப்படி உறவு மாறலாம் ஆனால் கடைசியில் உண்மை ஒன்னு தான் அதை கீழ டிஸ்கியில் சொல்லி இருக்கேன் பாரு.

டிஸ்கி : நல்லவன் பெயர் வாங்கி நாக்கு தான் வழிக்கனும் மச்சி!!!

உண்மையான டிஸ்கி : அட தூக்கம் வரலைங்க. இதை எல்லாம் சீரியஸா படிச்சிகிட்டு. இப்போ பாருங்க எவனாவது ஒரு கேனை வந்து எங்கையோ செம்மையா வாங்கி இருக்காண்டானு கமெண்ட் போடுவான். ஆனா இது எல்லாம் நாட்டுல நடக்கர நெசம்ங்க.. :)

.