Sunday, August 29, 2010

வாழ்த்துக்கள்

முஸ்கி : சிரிப்பு போலீஸ் வாழ்த்துக்களின் தொடர்ச்சி

நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...

(அந்த அழகான பெண் நிருபர் சிரிப்பு போலீஸ் காண போலீஸ் ஸ்டேஷன் செல்கிறர்)

ஏட்டு : யாருமா நீ?

நிருபர் : இங்க அழகா, அறிவா ரமேஷ்னு ஒருத்தர்....

ஏட்டு : அப்படி யாரும் இங்க இல்லமா.

நிருபர் : இல்ல சார் இந்த ஸ்டேஷ்ன்தான் சொன்னாங்க.

ஏட்டு : ரமேஷ்னு ஒருத்தர் இருக்காரு ஆன நீ அழகா இருப்பாரு சொல்றியே, அதுலயும் அறிவு ரொம்ப ரொம்ப கஷ்டம்.

நிருபர் : தப்பா தகவல் சொல்லி இருக்காங்க போல. அவர பாக்கலாமா?

ஏட்டு : லாக்கப் உள்ள விசாரனை நடக்குது போய் பாருங்க.

நிருபர் : ஓ!! என்ன விசாரனை?

எட்டு : மார்க்கட்ல வாங்கின மாமூல் சரியா பிரிச்சி கொடுக்கல சொல்லி கைதி எல்லாம் சேர்ந்து அவர அடிச்சிட்டு இருக்காங்க.

(நிருபர் வருவதை கண்டு ரமேஷ் கைதிகளிடம் கெஞ்சி வெளியில் வருகிறார். லாக்கப் பார்த்து...... பிச்சிடுவேன் பிச்சி!!! கைதி கொடுரமாக முறைக்க. கண்ணாலே அவன் காலில் விழுகிறார்)

ரமேஷ் : (பல் எல்லாம் காட்டி) சொல்லுங்க!!!

நிருபர் : (என்ன இப்படி இளிக்குது... இதான் சிரிப்பு போலீஸா) Good Morning!!

ரமேஷ் : (பெருமையுடன்) My name is Ramesh.

நிருபர் : But, நான் உங்க பெயர் கேக்கவில்லை. வணக்கம் சொன்னேன்.

ரமேஷ் : ஹி..ஹி..ஹி... எனக்கு இங்லிஷ் வராது. தமிழ்லா....

நிருபர் : சரி. சரி. விநாயகர் சதுர்த்தி வருது.. நீங்க வாழ்த்து சொல்லனும்.

ரமேஷ் : அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேக்கனும்.

நிருபர் : சினிமா சம்மந்தம் இல்லாம கேளூங்க.

ரமேஷ் : (பிகர் ரெம்பா உஷார இருக்கே. நமக்கு வேற ஒன்னும் தெரியாதே)நீங்க ரொம்ப அழக இருக்கிங்க. உங்க பெயர் என்ன?

நிருபர் : குஷ்பு டாடி...

ரமேஷ் : என்னாது டாடியா?

நிருபர் : ஆம டாடி.  நான் உங்க அண்ணன் பொண்னுக்கு தோழி. அவதான் உங்க விலாசம் கொடுத்தா...

ரமேஷ் : ஆஹா!! வடை போச்சே (வாழ்த்து சொல்லாமல். சோகத்துடன் லாக்கப் நோக்கி செல்கிறார்)

நிருபர் : இது சிரிப்பு போலீஸ் இல்ல லூஸு போலீஸ்.. இதுக்கு அவங்க எவ்வளோ தேவலாம்..

டிஸ்கி : ரமேசுசுசு... இனி என்ன கலாய்ப்ப?

.

Wednesday, August 25, 2010

சாத்தான் வேதம் ஓதுகிறது..


அன்பான ஆடு வெட்டிகளே!! 

வணக்கம்!! இப்பொழுது பதிவுலகில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் கும்முவது. கும்மி என்பது நாமக்கு மகிழ்ச்சியாக இருக்களாம். ஆனால் அந்த பதிவர் மனம் வருந்துவதை நாம் மறந்து விடுகிறோம். 

நிறைய பதிவர்கள் ரொம்ப நல்லா எழுதராங்க அவங்க பதிவு எல்லாம் வெறும் ஓட்டு போட்டு வந்துடறோம். அவங்கள பாராட்டி நாலு வார்த்தை எழுது ராசா தப்பில்ல. அதுக்கு முதலில் பதிவ படி.  கும்மி அடிக்க சொன்னா மட்டும் வரி வரியா படிப்போம். உனக்கு பிடிக்காத பதிவரா இருந்தாலும் நல்லா எழுதினா போய் பாராட்டு.

 ஆடு வெட்டுங்கள்! தவறான காருத்து கூரினால் இழுத்து போட்டு வெட்டுங்கள் ஆனால் நல்லா பதிவு, கவிதை என்றால் ரசிச்சி நாலு வார்த்தை எழுதுங்க. கும்முங்க அதுக்குனு சில மானம், ரோசம் இல்லத ப்ளாக் இருக்கு அங்க கும்முங்க (என் ப்ளக் மாதிரி).


நான் சொல்றது சரினு பட்டா இனி முதலில் பதிவு பற்றிய உண்மையான கருத்து சொல்லிட்டு அப்புறம் கும்மி அடிக்க ஆரம்பிங்க. மாற்று காருத்து இருந்தா சொல்லுங்க கேட்டு கொள்கிறேன். அன்பா கருத்து சொன்ன வந்து ஸ்மைலி கமெண்ட் போடுவேன். அதிகாரமா சொன்னா ஜய் தலமையில் அருண், பருப்பு, நரி, பன்னிகுட்டி ராம்ஸ், முத்து, ஜய்லானி ஆகிய அசைவ பூசாரிகளூம். சிரிப்பு போலீஸ், வெங்கட், மங்கு, தேவா, செல்வா, ஜில்லு, சௌந்தர், இம்சை பாபு ஆகிய சைவ பூசாரிகலூம் உங்களை அறுப்பார்கள்.

அராஜகம சொன்னா அந்த நிமிடாம் அங்கயே காலில் விழப்படும் என்பதை கொஞ்சம் கூட மானம், ரோசம், சூடு, சொரனை இல்லாமல் சொல்லி கொள்வாதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிரேன்.

அன்பான (நல்ல) பதிவர்களே!!

வணக்கம்!! மறக்காம கமெண்ட் மட்ரேஷன் உபயோக படுத்துங்க இல்லன நானும் என் குரூப்பும் உள்ள பூந்து கும்மி அடிப்போம். அப்புறம் வருத்தபட கூடது. அதே மாதிரி வர விமர்சனங்களை நடுநிலையா வெளியிடுங்க. தகாத வார்த்தை உபயோக படுத்தினா தடை செய்யுங்க ஆன எதிர் காருத்து கூரினால் வெளியிட்டு பதில் கூருங்கள்.

டிஸ்கி : நான் இங்க சொல்லி இருப்பது எல்லாம் என் சொந்த கருத்துகள். இதற்க்கு முன்பு யாரவது இப்படி பதிவு இட்டு இருந்தால் இங்கு தெரிவிக்கவும். அப்புறம் மேல சொல்லி இருக்கவன் எல்லாம் என் நண்பன் இல்ல..... என்ன முதலில் அறுக்க போற துரோகிங்க... வந்து ஆரம்பிங்க ராசா...

Sunday, August 22, 2010

பாவம் போலீஸ்...

அது நான் ஒரு பிரபள தனியார் நிருவணத்தில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம் (நம்புங்க மக்கா... நான் உண்மையா வேலை செய்தேன்). அந்த நிருவனத்தின் புதிய கிளை திறப்பு விழா பக்கத்து நகரத்தில் நடக்கவிருந்தது. அதற்க்கு நானும் அழைக்கபட்டேன் (நம்ப மாட்டிங்களே). சரி அங்க வேலை செய்ய ஆள் இல்லை சொல்லி தலையில் மஞ்சள் தண்ணி தெளிச்சி கூட்டிட்டு பேனாங்க.

சும்மா சொல்ல கூடது மக்கா மதியம் சோறு எல்லாம் போட்டாங்க. நாம சும்மாவே கொடுக்கர காசுக்கு மேல கூவுவோம் இதுல சோறு வேற போட்டாங்கலே. ராத்திரி 12 மணிவரை வேலை செய்துவிட்டு பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அந்த ஊரில் இருந்து இடையில் நிக்காம வர பேரூந்து இரவு 10 மணிக்கே சென்றுவிட்டது.

அதனால் பக்கத்ல இருக்க சின்ன ஊருக்கு போய் அங்க இருந்து பஸ் மாறி போய்விடலாம் நானே சொந்தமா சிந்திச்சி (என்ன சிரிப்பு?) பஸ் பிடிச்சி போய் சேர்ந்தே. அப்பொழுதுதான் தெரிந்த்து அந்த ஊர்ல அடுத்த பஸ் காலை 3 மணிக்கு (சத்திய சோதனை). சரின்னு பக்கதில் இருந்த கடை வாசலில் அமர்த்தேன்.

காக்க காக்க மாதிரி ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. ஒரு நாலு அதிகரி இரங்கினாங்க... டேய்ய்ய் இங்க வாங்கடா!! அப்படினு ஒரு அதட்டால். என் பக்கத்துல லுங்கி கட்டிடு இருந்த 4 அப்பவிங்க எழுந்து போனங்க. அடுத்து ஒரு அதட்டல் உன்ன மட்டும் தனியா கூப்பிடனுமா?  (என்னாதுது... நானா?? )  சொல்லுங்க சார்... எந்த ஊர்டா? சொன்னேன். இங்க என்ன செய்ற? Bagல என்ன? உன் ஐ.டி கர்டு எடு.. இப்படி பல கேள்வி கேட்டு ஜீப்ல ஏத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க.

ஸ்டேஷன் போனதும் அங்க ஏற்க்கனவே ஒரு ஆறு பேர் பிடிச்சி வச்சி இருந்தாங்க. எல்லார் கிட்டாயும் அப்பா பெயார், அம்மா பெயார், வீட்டு விலாசம் எல்லாம் வாங்கினாங்க. கைரேகை எல்லாம் எடுத்தாங்க மக்கா... அப்போ அங்க இருந்த ரேடியோல அவங்க உயர் அதிகாரி ஒரு கேள்வி கேக்கராரு.... எத்தனை சந்தேக கேஸ் பிடிச்சிங்க?... இவரு சொல்ராரு.. 11 அச்சி ஸார்... (அட பாவிகளா... எத வச்சியா என்ன சந்தேக பட்டிங்க..). நானும் ரொம்ப அடக்கமா... என் ஸார் என்ன சந்தேக பட்டிங்க கேட்டேன்..

அவரு சொல்ராரு. சந்தேகம் எல்லாம் ஒன்னும் இல்ல தம்பி.. ஒரு நாளைக்கு 10 கேஸ் பிடிக்கனும் டார்கட். அதான் அள்ளி போட்டு வந்தோம். நீங்க கிளம்பளாம். (ஜீப்ல கூட்டி போய் விடமாட்டிங்களா கேக்கலாம் நினைத்தேன்... கைல நீட்டு குச்சி வச்சி இருந்தாரு..). சரினு நடந்தே பழயா இடத்துகு வந்தேன். அடுத்த 10 நிமிசம் இன்னும் ஒரு போலீஸ் ஜீப். அதே வசனம்... (இவிங்க வேற ஸ்டேஷனாம். ஸார் இப்போதான் அந்த கோவில் கிட்ட இருக்க ஸ்டேஷன் போய்ட்டு வரேன் கைல கரி (கைரேகை எடுக்க பூசின மை..) பாருங்க காட்டினேன். அட அவங்க முந்திடாங்கள அப்படினு சிரிச்சிட்டு விட்டு போய்ட்டாரு.

டிஸ்கி : போலீ|ஸ் உயர் அதிகாரிகளே குற்றம் அதிகரிக்காமல் இருக்க நீங்க உங்க கீழ உள்ள அதிகாரிகளூக்கு டார்கட் கொடுக்கரிங்க.. அவங்க பாவம் ஆள் கிடைக்காம கைல கிடைக்கர அல்ல கை எல்லம் சந்தேக படராங்க...நாளைக்கு எங்காவது தப்பு நடந்த. முதலில் சந்தேக கேஸ்ல பிடிச்சவங்கள கும்முவிங்க... எங்க உட்ம்பு அடி தாங்கது ஸார்..... பாத்து செய்ங்க...

Tuesday, August 17, 2010

வாங்க கோடிஸ்வரர் ஆகலாம்...


முஸ்கி : MLM என்று அழைக்கும் மல்டி லெவல் மார்க்கட்டிங் செய்பவர்கள் சிந்திக்க...

ஐயா தெய்வங்களே வணக்கம்!!  உங்களிள் சிலர் கொடுக்கர ரவுசு தாங்கலபா... வெறும் ரு.9999.99 கொடுத்து ஒரு பொருள் வாங்கிட்டு, வெறும் இரண்டுபேரை நீங்க சேர்த்து விட்டுட்டா போதும்... ஒரே மாதத்தில் நீங்கள் கோடிஸ்வரர் இப்படி சொல்லி மார்க்கட்டிங் பன்ராங்க....

ஐயா சாமி நான் அடுத்த வேலை சோறு திங்கவே காசு இல்லாத பரதேசி என்ன விட்டுவிடுபா சொன்னா... அப்படியா!!! நீதான் சரியான ஆள். உன்கிட்டதான் முன்னேறனும் வெறி இருக்கும்... சொல்லி மனுசன வெறியெத்தறது.

(சரி கழட்டி விடலாம் சொல்லி) இங்க என்ன நம்பி 10 பைஸா தரவே ஆள் இல்ல. இதுல இரண்டு ஆள் அதும் 10000 ருபாய்.. விடுங்க பாஸ் வேலைக்கு ஆகது அப்படினு சொன்னா. அப்போ நீங்க இவ்வளோ நாள் வழ்ந்ததே வீன் சொல்லி உசுப்பேத்த வேண்டியது.

(நம்மலும் மான ரோசத்த விட்டு) ஆம ஸார்! இது சரி வராது நான் கிளம்பரேன் சொன்ன!!!! இருங்க ஸார். உங்களுக்கு ஆள்தான பிரச்சனை. என்கிட்ட 10 ஆள் இருக்காங்க அதுல 2 தரேன். நீங்கலும் என்னோட சேர்ந்து வளருங்க சொல்லி ஆசை காட்டரது.

நம்மலும் மனசுமாரி, நமக்காக இவ்வளோ தியகம் செய்யர நண்பர் இந்த உதவி செய்ய மாட்டாரா நினைத்து. மெதுவ... ரொம்ப மெதுவ.. ஸார் ஒரு 10000 ஆயிரம் கடண் கொடுத்து என்ன இதுல சேர்த்து விடுங்க. முதல் கமிஷன் வந்ததும் திருப்பி கொடுத்துடரேன் சொன்னதும்... என்ன ஸார் நோகாம நோம்பு கும்பிட பாக்கரிங்க அப்படினு மனுசன் ஆவரு பாருங்க டென்ஷ்ன்....

ஐயா நீங்க கோடிஸ்வரர் ஆகுங்க வேண்டாம் என்று சொல்லவில்லை! எங்கலுக்கு உதவ நினைக்கிர உங்க பெரிய மனசு புரியுது. ஆனா எங்கள் துரை வேறு சரி வராது சொன்னா விட்டுவிடுங்கள். கட்டாய பாடுத்த வேண்டம். நாளை உங்களை கண்டாளே ஓட வேண்டிய நிலை உருவாக்காதிர்.

டிஸ்கி : நண்பர்களை புண்படுத்த எழுதவில்லை எங்கள் உணர்வுகளை வெளிபடுத்த எழுதியது. படிக்கிர மக்கா நாளை உனக்கும் இந்த நிலை வரலாம் அதனல் மரியாதைய சொல்ரேன் இதுக்கு ஓட்டு போடு... ஒரு ஆள் மாறினாலும் சந்தோஷ்ம்.

Sunday, August 15, 2010

நானும் பதிவுலகில் இருக்கனாம்....

முஸ்கி : செல்வா

1 .) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?

எனக்கு ஒர் அளவு எழுத தெரியும் ஆன படிக்க தெரியது.. நீங்க கொஞ்சம் படிச்சி சொல்லுங்கலேன்...

2 .) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?

நீங்க இன்னும் படிச்சி சொல்லவே இல்லயே....

3 .)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ..?


அது ஒரு கேவலமான கதை... வேலை நேரத்துல செய்ய வேலை இல்லாம என்ன பன்னலாம் யோசிச்ட்டு இருந்த நேரத்துல என் உயிர் நண்பன் முஷாஹிதின்... நீயும் என்ன மாதிரியே உருப்படம போ சொல்லி தமிலிஷ் லிங்க் கொடுத்தான். நானும் டாக்டர் பட்டம் வாங்கர அளவு அதை அலசி ஆரய்ந்தேன்... அப்பொ நம்ப கோகுலதில் சூரியன் ப்ளாக்ல இந்த VKS பசங்க அடிக்கர கும்மி பாத்து நம்ம வெங்கட் ஆதரவா கும்மி அடிக்க ப்ளாக் ஆரம்பித்தேன். இப்பொ கட்சி வளர்ச்சிக்கு  இராபகலா பாடுபடரேன்.  நீதி : இதை கேக்கனும் உங்க தலையெழுத்து.....
 
4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?


இது வலைப்பதிவு இருக்கவங்கல கேக்கனும்...  அடுத்த கேள்வி...
 
5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
 
கண்டிப்பாக. நீங்கள் கேட்ட 3வது கேள்விக்கான பதில் என் சொந்த விஷயம். இன்னும் இதுபோல் பல பயனுள்ள சொந்த விஷயம் சொல்லுவேன். விளைவு இனி நீங்க இந்த பக்கம் வரமாட்டிங்க.
 
6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?
 
நிச்சயமாக பொழுதுபோக்கு அல்ல. நான் கமெண்ட், பதிவு எழுதுவது அலுவலக நேரத்தில். அதற்க்கு மாதா மாதம் என் அலுவலகத்தில் சம்பளம் தருகிரார்கள்.
 
7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?


நான் சோட குடிக்க போறன். அதுக்குல்ல நீங்க இங்க போய் 7வது கேள்விக்கு சிகப்பு மைல எழுதி என்ன பதில் இருக்கோ அதை படிச்சிகோங்க.
 
8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?


ஜாதி, மதம், இனம், கடவுள், நாடு இப்படி எல்லம் விஷயதுகும் குரூப் குரூப்பா பிரிந்து சண்டை போடரதை பாத்த பொறாமைய இருக்கு. என்ன ஆட்டைல சேத்துகல கோவம் கோவம வருது...
 
9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?


அது ஜய் அப்படினு ஒரு அப்பாவி பட்டிக்காட்டான்.... நம்பிக்கை இல்லன இங்க பேய் பாருங்க...
 
10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?


என்னை பற்றி தேர்தல்ல நான் நிற்க்கும்போது சொல்ரேன்.  (கருத்து சொல்லபோறன் இஷ்டம் இல்லாதவங்க கிளம்பளாம்) இப்பொ உங்க வீட்டு ஜென்னல் வெளியே எட்டி பாருங்க அங்க ஒரு உலகம் தெரியுதா? ஆங்ங்.... அந்த உலகத்துக்கு உன்னால முடிந்த நல்லது செய்.... உன்னபத்தி ஊர் பதிவு எழுதும்.
 
டிஸ்கி : ஓட்டு எல்லம் போட்டு பதிவுலக அசிங்க படுத்தாதிங்க... வேற.... ஒன்னும் இல்ல கிளம்புங்க தலை..

Wednesday, August 04, 2010

சோப்பு கிடைத்த ரகசியம்...


பதிவுலக மக்களுக்கு வணக்கம்!! நான் எழுதுவதற்கு தூண்டுகோலாய் இருந்த.... இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். எங்க நான் எழுதிட போறேன் சொல்லி பலபேரு பயத்தோட இருக்காங்க. இருந்தாலும் திருமதி.காயத்ரி அவர்கள் நம்ப மொக்கை பத்தி தெரியாம தொடர்பதிவு  காண்டாமிருகமும் பேபி சோப்பும் அப்படின்னு சொல்லி சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டாங்க.

ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம் அது பெயர் ரெமோ (காண்டாமிருகம் டைப்பண்ண கடுப்பா இருக்கு) அதுக்கு ரொம்ப நாள பேபி சோப்பு போட்டு குளிக்கணும் ஆசையாம். ஆனா காட்டுல கடையே இல்லையம். அப்போ அங்க ஒரு குரங்கு வந்துச்சாம். ரெமோ அந்த குரங்குகிட்ட தன் ஆசையா சொல்லுச்சாம்.

அத கேட்ட குரங்கு இவ்வளோதான உன் ஆசை சொல்லி ரெமோ காதுல ஏதோ சொல்லுச்சாம். அதை கேட்ட ரெமோ ரொம்ப சந்தோசம் ஆகிடுத்து.

அடுத்த நாள் ரெமோ சந்தோசமா பேபி சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்ததாம். அங்க வந்த யானை உனக்கு எப்படி பேபி சோப்பு கிடச்சுது சொல்லி கேட்டுதாம். அதுக்கு யானை காதுல ரெமோ அந்த ரகசியத்த சொல்லுச்சாம்.

குரங்கு ரெமோ கிட்ட என்ன ரகசியம் சொல்லுச்சி? ரெமோ யானை கிட்ட என்ன சொல்லுச்சி? அட.... உங்கள மாதிரிதான் நானும் ஒட்டு கேக்க முயற்சி பண்ணேன். அதுங்க ரொம்ப மெதுவா பேசினதுல ஒன்னும் கேக்கல. அதனால் குரங்கு, ரெமோ மற்றும் யானை ஆகிய மூன்று விலங்குகளையும் இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்.... அவர்கள் எழுதும்போது சோப்பு கிடைத்த ரகசியத்தை தெரிந்துகொள்ளவும். இப்போ நீங்க உங்க வீட்டுக்கு (ப்ளாக்) போலாம்...


டிஸ்கி :  இதுக்கு மேல தொடர் பதிவுக்கு யாரவது கூப்பிடுவிங்க?