நீங்கள் எப்பொழுதாவது உங்கள் மணிபூரகம் வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா. உங்கள் வயிற்றின் மைய பகுதியில் இருந்து ஒரு தீ ஜுவாலை எழுந்து உங்கள் உடல் முழுவது பரவுவதை உணர்ந்து இருக்கிறிர்களா? நான் உணர்ந்து இருக்கிறேன். என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி மூளையில் சம்மட்டி கொண்டு அடிக்கும் பொழுது. உடலில் உள்ள ஒவொறு திசுவும் இந்த கேள்வி எதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது என்னை நோக்கும் பொழுது உணர்ந்து இருக்கிறேன்.
அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் கேளி பேச்சுகளும், அவமாணங்களும். எந்த திசையில் தேடுவது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் என் தேடுதலின் தீவிரம் குறைந்தது ஆனால் உள் எறியும் தீயின் வேகம் கூடியது. அனல் பொருக்க முடியாமல் பல முறை தாயின் கருவரையில் சென்று ஒளிந்து கொள்ள ஆசை பட்டதுண்டு. இறைவன் சன்னிதியில் மண்டி இட்டு என் சுயம் மறக்க செய் என்று இரஞ்சியது உண்டு.
துறைகள் பல மாறி விடை தேடினேன். விடை கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் குறைந்தது. மனம் தேடலை மறந்து கால வெள்ளத்தில் அமைதியாக நீந்தி கொண்டு இருந்தது. எரிந்து கொண்டு இருந்த இடத்தில் வெறும் சாம்பலும் கரியும். இனி கவலை இல்லை அமைதியாக காலத்தை கழிக்கலாம் என்று என்னி இருந்த நேரத்தில் எனக்குள் எதோ ஒரு மாற்றம். மீண்டும் அந்த அனலை உணர்கிறேன். முன்பிலும் அதிகமாக.
கரியும் சாம்பலும் என்று என்னிய இடத்தில் ஒரு எரிமலை உறங்கி கொண்டு இருந்தது. அது வெடித்து சிதறி தீ குழம்பு உடல் முழுவதும் பரவுகிறது. இதயக்கூட்டை அடைந்து அங்கிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பு பாய்கிறது. இறைவனிடம் மீண்டும் இரஞ்சுகிறேன் நான் முன்பே தேடி தேடி சோர்ந்து விட்டேன் அதனால் இந்த தீயை அனைத்துவிடு. என்னை அமைதியாக வாழ விடு.