Tuesday, December 28, 2010

நான் & நான்

இது என்னோட ப்ளாக்தான? அப்பொ நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களே? ரைட்டு. எப்பவும் போல இது யாரையோ அர்ச்சனை பண்ணி எழுதின பதிவு இல்லை. எனக்கு நானே அர்ச்சனை. சந்தோஷமா படிங்க இல்லை அடுத்து கவிதை எழுதுவேன்.

நான் : டெம்ப்ளேட் கமெண்ட் போடறது தப்பா? போடறவனும் கஷ்ட்டபடவில்லை ப்ளாக் ஓனரும் கவலைபடவில்லை. நடுவுல உனக்கு ஏன் நாயே நக்கலு?

நான் : லூசுதனமா பேசாதடா!! பதிவு போர் அடிக்கிது சொல்லி கமெண்ட் பாக்கலாம் போனா ஆக, அருமை, எருமை சொல்லி கமெண்ட். எந்த ப்ளாக் போனாலும் அதே கமெண்ட். எரிச்சலா இல்லை? அதான் நக்கலடிக்கிறேன்.

நான் : அப்போ நீ ப்ளாக்கே படிக்காம வா நாயே. நீ படிக்கலனு யார் இப்பொ அழுதா? ஓட்டு மட்டும் போட்டு வா. அப்படிதான் கவிதை எழுதர ப்ளாக்க பார்த்தா உனக்கு கற்பனை பொங்குது ஏன்? நல்ல ரசிக்க தெரிஞ்சவன் இந்த வரி நல்லா இருக்கு சொல்லி பாராட்டரான். இல்லைனா அருமை, நல்லா இருக்கு இப்படிதான் சொல்ல முடியும். அதுக்கு என்ன ஒரு எதிர் கவிதை, பாராட்டரவங்களை கலாய்க்கரது. என்ன பெரிய ரவுடியா நீ? ராஸ்கள்.

நான்: டாய்!! நான் ரவுடினு நான் சொன்னா? அது என்னாமோ கவிதை எழுதறவங்கள பார்த்தா சிரிப்பா வருது மச்சி. முக்கியமா ரசிக்கரவங்கள பார்த்தா. ஏன்னே தெரியாலை கலாய்க்கனும் தோனுது மச்சி.

நான் : தோனும்டா தோனும். ஆமாம் அது என்ன பொம்பள புள்ளை ப்ளாகல கமெண்ட் போடறவன் எல்லாம் சாட்ல போய் கலாய்க்கறியாம்? உனக்கு ஏன் நாயே இந்த பொழப்பு. நாலூ பேரு பாராட்டினாதான நல்ல எழுத தோனும். உனக்கு பிடிக்கலனா சும்மா இருக்கலாம் இல்லை?

நான் : யோ!! சும்மா இரு அங்க விஷயமே இல்லை சும்மா அங்க போய் ஆக எப்படிதான் இப்படி எழுதறிங்க சொன்ன கடுப்பா இருக்காதா? நல்லா எழுதர ப்ளாக்ல பாராட்டினா யார் வேண்டாம் சொன்னா. ஒன்னுமே இல்லாத ப்ளாக்ல 50 கமெண்ட் 100 கமெண்ட் இருக்கு எல்லாம் டெம்ப்ளேட். உன் ப்ளாக்ல கூட தான் இருக்கு சொல்லாத. இங்க இருக்கது எல்லாம் ஒன்னு சாட் இல்லைனா என்னை திட்டி இருப்பானுங்க. பாராட்டுறேன் சொல்லி ஓவரா வழியரானுங்க மச்சி! அதான் சாட்ல போய் கலாய்க்கரேன்.

நான் : அப்போ பெண்கள் எல்லாம் தங்க கட்டி பசங்க மட்டும் தான் ஜொள்ளு விடறாங்களா? எண்ணாட சொல்லவர நீ?

நான் : நான் சொன்னா? நான் அப்படி சொன்னா? நீயா நினைச்சிகிட்ட நான் என்ன பண்ண முடியும்? ஒரு கவிதை இல்லைனா செண்டிமெண்டா யாரும் எழுதிட கூடாது அங்க போய் லிட்டர் லிட்டரா... விட வேண்டியது.  கண்ணிர் மச்சி நீ ஏன் தப்பா நினைக்கிற. பசங்களை இறங்கி கலாய்க்கலாம் மச்சி. பெண்களை கலாய்ச்சா நாலு பேரு சொம்ப தூக்கிட்டு பஞ்சாய்த்து வருவாங்க. அதான் பயயயயம். இப்போ என்ன டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா கலாய்க்க கூடாது அவ்வளாவு தான? ரைட்டு விடு. ஆனா ரமேஷ், அருண், கும்மி பசங்க எல்லாம் இதுல விதி விலக்கு சரியா?

நான் : இப்போ தான் நியாபகம் வருது. அது என்னா தொடர் பதிவு எழுதறவன் கிட்ட வம்பு? கேட்டா ஜாலிக்கு சொல்லுவ.

நான் : அட! எதாவது ஒரு நல்ல விஷயமா எழுதினா நான் ஏன் கேக்க போறேன். மன்னர்களை பத்தி எழுதினாங்க நான் கேட்டனா? பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா? சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))

நான் : இப்போ கடைசியா என்னதாண்டா சொல்லவர...

நான் : ஆரம்பத்துல சொன்னது தான்... :))