உறங்கி கொண்டு இருந்த கணேஷ் திடுகிட்டு விழித்தான். அருவமாக எதோ ஒன்று அவன் படுக்கைக்கு அடுத்து நிற்பதை போல் உணர்ந்தான். எழுந்து விளக்கை போடலாம் என்று நினைத்த போது விளக்கை போட வேண்டாம் என்று யாரோ கூறுவதை போல் உணர்ந்தான். என்ன நடக்கிறது என்று யோசிக்க முயற்சி செய்த நேரத்தில் அவன் தலையை யாரோ வருடுதுவது போல் உணர்ந்தான்.
உடலில் உள்ள ரோமகால் எல்லாம் சில்லிட்டு அடிவயிற்றில் ஒரு பயத்தினை உணர்ந்த வேளையில் அவன் நினைவு தவறியது. கண்விழித்து பார்த்தபொழுது அவன் ஒரு முற்றிலும் புதிய உலகில் இருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு உயிரினமும் இல்லை ஆனால் உணர்வுக்கு எட்டிய தூரத்தில் பல அருவங்கள் உலவி கொண்டு இருப்பதை உணர முடிந்தது.
அருகில் உணர்ந்த ஒன்றை கூப்பிட நினைத்தான் அது தானாக அருகில் வந்தது. என்ன வேண்டும் என்ற கேள்வி அது கேட்பது போல கணேஷ் மனதில் தோன்றியது. நீங்கள் யார்? நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்க்க நினைத்தாதும். நீங்கள் அல்ல நாம் யார் என்று கேள் என்ற பதிலை அது அவன் மனதில் பதிய வைத்தது. அப்போது தான் கணேஷ் கவனித்தான் அவனும் அருவமாக மாறி இருந்தான். இங்கு ஒலிகள் இல்லை எல்லா உரையாடல்களும் நேரடியாக மனதில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது.
அது மேலும் தகவல்களை பறிமாரியது என் அடையாளம் XXBBAC நீ XXYYZZ ஒரு முக்கிய சோதனைக்காக உன்னை பூமிக்கு அனுப்பி வைத்தோம். அங்கு உன் பெயர் கணேஷ். சோதனை முடிந்ததால் இங்கு திரும்ப அழைக்கபட்டாய். நாம் இப்படி தகவல்களை பறிமாறிகொள்ள நமக்கு கனிசமான அளவு எரிபொருள் தேவை படுகிறது. அது பூமியில் உள்ள மனிதர்களின் மூளையில் இருந்து உண்டாகும் மின்சார சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும்.
அதற்க்காக நாம் ஒரு குறிபிட்ட இடைவெளியில் பூமியில் ஒரு செல் உயிரிகளை விதைத்து வளர்க்கிறோம். அது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதானாகி பின்னர் நானோ மனிதன் என்ற நிலையை அடையும் பொழுது நாம் மொத்தமாக பூமியில் அழிவை உண்டாக்கி அவர்கள் மூளைகளை அறுவடை செய்வோம். செல்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது என்று பார்க்க நமது இனத்தை சேர்ந்த ஒருவரை பூமிக்கு அனுப்பி அவார்கள் மூளையில் உள்ள தகவல்கள் சேகரித்து வந்து பரிசோதிக்கிறோம்.
ஆனால் இந்த முறை விதைத்த செல்கள் எல்லாம் வீணாகிவிட்டது. நாம் எத்தனையோ வழிகளை உபயோகித்தும் கோபம், பொறாம், வஞ்சம் இப்படி பல களைகள் அவர்கள் செல்களில் கலந்து இருப்பது தெரிகிறது. அதனால் வேகமாக இந்த பூமியை அழித்துவிட்டு புதிய பூமியை படைக்க வேண்டும் என்று கூறி கொண்டே recycle என்ற பட்டனை தட்டியது ரீசைக்கிள் என்று அழைக்கபட்ட தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் அந்த எந்திரம் பூமியை தன்னை நோக்கி இழுக்க தொடங்கியது.....
.