Friday, March 08, 2013

நீ தானே என் பொன் வசந்தம்..


மானம் கெட்ட மச்சான் வைகை சரியாதாம்லே சொல்லி இருக்கான். நீ தானே என் பொன் வசந்தம் நைஸ் மூவி. இனையத்தில் விமர்சனம் எழுதர காமன் மேன்ஸ் தான் தப்பா சொல்லிட்டாங்க. இவங்க பேச்சை நம்பி டவுன்லோட் செய்து இரண்டு வாரமா (அருவை படம்னு) பாக்காம இருந்தேன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை அப்படி புகழ்ந்தாங்க.. தியேட்டர் போய் தலைவலி வந்தது தான் மிச்சம். இவங்க பேச்சை நம்பி இனி எதுவும் செய்ய முடியாது போல. சமந்தாவுக்கு பதில் வேர யாரையாவது ஹீரோயினா போட்டு இருக்கலாம். சமந்தா மிஸ் பண்ணத அவங்களுக்கு டப்பிங் பேசின பொண்ணு சரி செய்து இருக்கு. வாய்ஸ்ல என்ன ஒரு எக்ஸ்பிரஷன்!!! ஜீவா கேரக்டர்ல சுத்தமா அழுத்தமில்லை. காதலை விட குடும்பம் முக்கியம் அப்படினு அவரு முடிவு செய்து படிப்பில் கவனம் செலுத்தரதா வர இடம் உவ்வ்வ்வே.... (சரியாக சொல்லபடவில்லை). அதே மாதிரி ஓரு ஓரு முறையும் வேண்டாம் போய்டு, விட்டுடு சொன்னதும் அதோட ஹீரோ ஒரு வார்த்தை பேசாம விட்டுடராரு.. அது டோட்டல் மொக்கை. க்ளைமாக்ஸ்ல கல்யாணத்தை விட்டு வர சீன்ல மட்டும் தான் ஈரோவுக்கும் ஓவர் லவ் மாதிரி காட்ராங்க. மற்றபடி கடமைக்கு லவ் பண்ற ஒரு பையனை சின்ஸியர லவ் பண்ர ஒரு பொண்ணோட கதை தான் “நீ தானே என் பொன் வசந்தம்”. 

தம்பி கௌதம் நல்லா தான் படம் எடுத்து இருக்க வாழ்த்துகள். ஆனா அந்த சமோசா வாங்கர சீன்ல “நான் தான் அதிகமா ஆர்டர் பண்ணேன். நான் பில் கொடுக்கரேன்” ஹீரோயின் சொன்னதும் ”நோ நோ நான் தான் பில் கொடுப்பேன். இன்னைக்கு மட்டுமில்லை இனி என்னைக்குமே அப்படிதான்” அப்படினு ஹீரோ சொன்னதும் ஹீரோயின் உருகி போர மாதிரியும் உடனே ஒரு சாங் வர மாதிரியும் இருக்க சீனை சந்தானம் & அந்த குண்டு பொண்ணுக்கு கொடுத்து இருக்கலாம் நல்ல காமடியா வந்து இருக்கும். ஓருவேளை Hereafter I will take care about you அப்படினு ஹீரோ சொல்ரதா ஏதாவது இலக்கியமா மீனிங் வச்சி இருப்பியோ என்னவோபா அது என் மண்டைக்கு உரைக்கவில்லை.. :) (ஏலேய் மக்கா! அந்த சீனை பார்த்தா பில் கொடுக்கரவன் பின்னாடி தான் பொண்ணுங்க பல்ல இளிச்சிட்டு போகும் எல்லாரும் சொல்ரத நிஜமாக்கர மாதிரியே இருக்கு. கேரக்டர் ஸ்பாயில் ஆகாம இருக்க உனக்காக நான் சப்ஸ்டிடியூட் போட்டு ரோசிச்சி இருக்கேன்)

அதுக்கு பதில் அந்த மொட்டை மாடியில் ஹீரோயின் பேசர சீனும், அந்த சுனாமி கிராமத்தில் பேசர சீனும் நல்லா பண்ணி இருக்கபா வாழ்த்துகள்.. :). இது குஷி மாதிரி இருந்தாலும் வேறு தளத்தில் பயணிக்கிரது (நானும் இலக்கியவாதி ஆகிட்டேன்). அதில் ஹீரோயினோட ஈகோ தான் மெயின் ஆனா இதில் ஹீரோயின் சின்ஸியரா லவ் பண்றாங்கபா அதனால அவங்களுக்கு கோபப்பட உரிமை இருக்கு. மொத்ததில் படம் எனக்கு பிடிச்சி இருக்கு. டாட்

கடைசியில் என்னையும் சினிமா விமர்சனம் எழுத வச்சிட்டிங்களே....

.

Friday, August 17, 2012

வாழ்கை வாழ்வதற்கே


மக்களே!! ஊர்ல எவனாவது உங்களை பார்த்து தண்ணி அடிக்காத, தம் அடிக்காத, பொண்ணுங்க பின்னாடி சுத்தாத இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணா காறி மூஞ்சி மேலே துப்பிட்டு போய் உங்க வேலையை பாருங்க உங்க அப்பா சொன்னா மட்டும் காதில் வாங்காம போய்டுங்க. இல்லைனா அடுத்த வேலை சோறு கிடைக்காது.

ஒரு அனுபவபட்ட அறிவாளி சொல்ரேன். இருப்பது ஒரு வாழ்கை. அதை சந்தோஷமா வாழுங்க. எல்லாம் அளவோட இருக்கவரை எதுவும் தப்பில்லை. மாசத்துக்கு ஒரு நாள் மூச்சி முட்ட குடிச்சிட்டு வாந்தி எடு. அப்போ அப்போ ஒரு தம் அடி. எவ்வளவு பொண்ணுங்க கூட சுத்த முடியுமோ சுத்து. ஆனா எதிலும் அடிமையாகிடாதிங்க. 

இதை உன் கேர்ள் பிரண்டுகிட்ட சொன்னா அவன் கிடக்கரான் பொறுக்கி. நீ தான் கிரேட் அப்படினு சொல்லுவாங்க. ஆனா நாளைக்கு என்ன வேணா நடக்கலாம். ”சாரி டா எங்க வீட்டில் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை” அப்படினு சொல்லிட்டு அந்த புள்ளை ஒரு நல்ல லைப்ல செட்டிலான பையனா பார்த்து கட்டிகிட்டு (நல்லா கவனி மகனே அவன் லைப்ல செட்டிலாகி இருக்கனும் அதான் முக்கியம்.) அதுக்கு அடுத்த நாள் “டேக் கேர் டா உன் நல்ல மனசுக்கு நல்ல பொண்ணு கிடைப்பா. ஐயம் அன்லக்கி” அப்படினு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட்டு அதோட உன் அத்தியாயத்த மூடி வச்சிட்டு ஹனி மூன் போய்டுவா. நீ அந்த எஸ்.எம்.எஸ் பார்த்து பார்த்து புல்லரிச்சி போவ. அவ ஒரு புள்ளையை பெத்துட்டு வந்து “சம் வாட் லைப் கோயிங் டா. ஸ்டில் ஐ ரிமம்பர் யூ” அப்படினு அடுத்த எஸ்.எம்.எஸ் போடுவா. நீ அதை வச்சி பார்த்து பார்த்து அடுத்த நாலு வருஷம் நாசமா போவ.

என்னைக்காவது ஒரு நாள் அந்த புள்ளை வீட்டுகாரன் மூக்கு முட்ட குடிக்கிரத பார்த்துட்டு என்ன உன் புருஷன் குடிக்கிராரு. உனக்கு தான் தண்ணி அடிச்சா பிடிக்காதே கேட்டு பாரு. "ச்சீ ச்சீ நீ நினைக்கிர மாதிரி எல்லாம் இல்லைடா அவரு ஒரு Social Drinker" அப்படினு பதில் வரும். அப்போ தான் நீ லைட்டா யோசிப்ப “நாமளும் அப்போ அப்போ லைட்டா குடிச்சி இருக்கலாமோ” அப்படினு. 

இது சும்மா பிகரை வச்சி சொன்ன உதாரணம் (அப்போ தான் உன் மண்டையில் சட்டுனு உரைக்கும்). நண்பர்கள், சொந்தகாரன், மேனேஜர், அண்ணன், தம்பி இப்படி உறவு மாறலாம் ஆனால் கடைசியில் உண்மை ஒன்னு தான் அதை கீழ டிஸ்கியில் சொல்லி இருக்கேன் பாரு.

டிஸ்கி : நல்லவன் பெயர் வாங்கி நாக்கு தான் வழிக்கனும் மச்சி!!!

உண்மையான டிஸ்கி : அட தூக்கம் வரலைங்க. இதை எல்லாம் சீரியஸா படிச்சிகிட்டு. இப்போ பாருங்க எவனாவது ஒரு கேனை வந்து எங்கையோ செம்மையா வாங்கி இருக்காண்டானு கமெண்ட் போடுவான். ஆனா இது எல்லாம் நாட்டுல நடக்கர நெசம்ங்க.. :)

.

Wednesday, July 04, 2012

கொல்கத்தாவில் கொசக்சி...

தன் கனத்த தொப்பையை தூக்கி கொண்டு எப்பொழுதும் போல் அதிகாலை ஓட்டத்தை துவங்கினார் பேனர்ஜி. பத்து நிமிடம் கழிந்த பொழுது ஒரு ஆள் ஆரவாரமற்ற சாலையில் ஓடி கொண்டு இருந்தார். அப்பொழுது இருளின் நிசப்தத்தை கிழித்து கொண்டு கூ.... சிக்புக்.. சிக்புக்... கூ சிக்புக் சிக்புக் என்ற என்ற மனித குரல அவர் காதை கிழித்தது. தூரத்தில் ஒரு பைக் வந்து கொண்டு இருந்தது.

பேனர்ஜியின் பக்கத்தில் வந்து அந்த பைக் நின்றது. அதில் இருந்து ஒரு இளைஞன் இரங்கினான். சிவந்த கண்களும் எண்ணை கானாத தலையும் அவன் தூங்கி, குளித்து பல நாள் ஆனதை சொல்லாமல் சொல்லியது. அடுத்து வந்த அந்த இளைஞன். சார் எங்க போறிங்க இண்டர்வியூவா? வாங்க நான் உங்களை கொண்டு போய் விடரேன் உங்களுக்கு உதவ எப்பொழுதும் காத்து கொண்டு இருக்கிரது இந்தியன் இரயில்வே என்றான்.

அவன் பேச்சும் உருவமும் ஒரு மிரட்சியை கொடுத்த காரணத்தால் பேனர்ஜி தயங்கியபடி. இல்லை நான் இப்படியே போரேன். நீங்க போங்க என்றார். உடனே முகம் மாறிய இளைஞன். உங்க இஷ்டத்துக்கு நீங்க போனா அப்புறம் நாங்க எதுக்கு இவ்வளவு பெரிய இரயில் விட்டு இருக்கோம் என்று தன் பைக்கை காட்டினான். குழம்பி நின்ற பேனர்ஜி.. இல்லை வந்து என்று இழுக்க. தன் முதுகில் மறைத்து வைத்து இருந்த இரும்பு தடியால் பேனர்ஜி தலையில் பலமாக தாக்கினான். மயங்கி விழுந்த பேனர்ஜியை தூக்கி தன் பைக் பெட்ரோல் டேங்க் மேலே போட்டுவிட்டு இந்திய இரயில்வே உங்களை அன்புடன் வரவேற்க்கிரது என்று சொல்லி தலையை குனிந்து வணங்கினான்.

வலியால் முனகியபடி கண்விழித்த பானர்ஜி தான் ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவசரமாக எழுந்து சுற்றி பார்த்தார். அந்த இளைஞன் அவரை நோக்கி வந்து கொண்டு இருந்தான். அருகில் வந்து ”சார் தூங்கிட்டிங்களா. நான் தான் உங்களை இங்க தூக்கி வந்தேன். நீங்க இண்டர்வியூ போக வேண்டிய ஆபீஸ் இதான் என்று மொட்டை மாடி விளிம்பை காட்டினான். பயத்தில் வியர்த்து கொட்டிய பேனர்ஜி. “இல்லை இண்டர்வியூ கேன்சல் ஆகிடுத்து” என்று சொல்லி முடிக்கு முன் “உன்னை தான் கூப்பிடராங்க போய்யா” என்று மாடி மேல் இருந்து தள்ளி விட்டான். ஆஆஆ.. என்ற குரல் காற்றை கிழித்த சில வினாடிகளில் சொத் என்று கேட்ட சப்தம் அவர் தரையில் மோதி உயிர் இழந்தார் என்று ஊர்ஜித படுத்தியது.

கீழே எட்டி பார்த்த இளைஞன் இந்தியன் ரயில்வே உங்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும். எங்கள் சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றி!! என்று சொல்லி விட்டு தன் போனை எடுத்து ஹலோ!! என்னது திவ்யா பிரசவ வலியால் துடிக்கிராங்களா? இதோ வருகிறது இந்தியன் ரயில்வே என்று கூறிவிட்டு... திவ்யா திவ்யா அழாதடா... நான் வந்துட்டேண்டா என்று சொல்லி கொண்டே... கூ சிக்புக் கூ சிக்புக் என்று ஓட தொடங்கினான்... (அடுத்து யாரை கொல்ல போரானோ)

டிஸ்கி : இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக பல முறை முயற்சி செய்து பாடர் மார்க் கூட எடுத்து பாஸ் செய்ய முடியாமல் மனநிலை பாதிக்கபட்ட கொசக்சி பசபுகழ் கதை இது... :)

.