Sunday, May 29, 2011

கஷ்ட்டமர் கேர்


உலகத்திலே மிக சிறந்த பேங்க், தொலைபேசி நிறுவனம் எல்லாம் இங்கதான் இருக்குப்பா.. அதுலையும் அவங்க பன்ற வாடிக்கையாளர் சேவை… சான்ஸே இல்லை ஒண்ணு நீங்க சாகணும் இல்லை அவங்க பேங்க்க விட்டு போகணும். அதுவரைவிட மாட்டாங்க.

பேங்க்குக்குள்ள போனதும் கஸ்டமர்கேர் அப்படினு சொல்லிகிட்டு ஒரு அம்மணி உக்காந்து இருக்கும் . இவங்க வேலை, தப்பி தவறி எவனாவதுஉள்ள வந்தா அவனை சிரிச்சிகிட்டே செருப்பால அடிக்கிறது. அடிச்சி தொரத்திட்டு மறுபடியும் வெட்டியா உக்காந்து கம்ப்யூட்டர்ல நோண்டரது.

மேடம்! இந்த சந்தேகத்தைகொஞ்சம் விளக்க முடியுமா? சாரி சார் இதை நீங்க கால் செண்டர்ல தான் கேக்கனும். அவங்க லைன் பிஸியாவே இருக்கு. இல்லையே இப்போ பாருங்க அப்படினு சொல்லிட்டு அந்த அம்மனி முயற்சிபண்ணுச்சி 15 நிமிஷ‌ம் ஆச்சி அப்பவும் லைன் கிடைக்கவில்லை. பாத்தீங்களா இப்போ நான் என்ன செய்யரது கேட்டா சாரி சார் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது அப்படினு ஒரு பதில்.

இதை சொல்லவா உன்னை அங்க சம்பளம் கொடுத்து உக்காரவச்சி இருக்கான்? இதை சொல்லவா காலைல மேக்கப் பண்ணிட்டு கிளம்பி வந்து உக்காந்து இருக்க? வாடிக்கையாளர் பிரச்சனை தீர்க்க முயற்சி பண்ணுங்க.. வாடிக்கையாளர தீர்த்து கட்ட முயற்சி பண்ணாதிங்க.

சரி இதுங்க கிட்ட பேசினா வேலைக்கு ஆகாது சொல்லி உன் மேனேஜர் மடையனை கூப்பிடு சொன்னா அவரு வருவாரு எதோ மொத்த துபாய் விலைக்கு வாங்கி போட்டவரு மாதிரி. என்ன சார் பிரச்சனை கேப்பாரு. இதாண்டா நாயே அப்படினு விளக்கினா சார் இதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது அப்படினு பதில் சொல்லுவாரு. சரி நான் புகார் பண்ணனும் இ-மெயில் ஐ.டி கொடு அப்படினு கேட்டா அதை கால் செண்டர்ல கேளுங்க சார் அப்படினு பதில் சொல்லுது அந்த மேனேஜர் மடையன். இப்போ இப்படி பேசுவானுங்க. நாம இதுங்க தொல்லையே வேண்டாம் அப்படினு அக்கவுண்ட் க்ளோஸ் பண்ணிட்டு போனா அப்போ வந்து ஆள்மாத்தி ஆள் பிச்சை எடுப்பானுங்க. 

இவனுங்க நோகாம ஏ.சி.ல உங்காந்து நோம்பு கும்பிட எவனோ வந்து நம்ம கிட்ட கெஞ்சிகிட்டு நிப்பான். இதுங்க இப்படியே ஒரு ஒரு கஸ்டமரா  துரத்திவிட்டுஅப்புறம் வருமானம் இல்லைனு ஓனர் கடைய மூடினதும் அடுத்த கடைய பார்த்து போய் மானம், ரோஷம்,வெக்கம் எதுவுமே இல்லாம எனக்கு கஸ்டமர் கேர்ல 10 வருஷம் அனுபவம் அப்படினு சொல்லி சம்பளத்துக்குபேரம் பேசுங்க. இதுங்க எல்லாம் எப்போ தான் திருந்துமோ…. :(

.

Tuesday, March 29, 2011

ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!

வணக்கம் மக்களே! இன்னைக்கு நம்ம கிட்ட சிக்கி இருக்கது பொண்டாட்டி கூட வாக்கிங் போறாவங்க. அதுவும் முக்கியம ப்ளட்பார்ம் மேல போறவங்க.

ஏண்டா வெண்னைகளா!! உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு நீ வாக்கிங் போ. ஆனா வழியவிட்டு போ. எதுக்குடா எங்க வழிய அடச்சிகிட்டு போறிங்க? எதோ உங்க விட்டு எஸ்டேட்ல நடக்கர மாதிரி. அதுவும் கொஞ்சம் ஓரமா போய் தொலையலாமில்ல? நாடு ப்ளட்பார்ம்ல நடப்பாரு. இவரு பாதி வழி அடச்சிபாரு. இவரு பொண்டாட்டி மீதி அடச்சிக்கும்.

இரண்டு பேரும் ஜோடியா பக்கத்து வீட்டு தாத்த எதிர்த்த விட்டு பாட்டிய கூட்டிகிட்டு ஓடி போனத பத்தி ரொம்ப சீரியஸா பேசிகிட்டு போவிங்க. நாங்க எல்லாம் எதோ பாதுகாப்பு படை மாதிரி உங்க பின்னாடியே எப்போடா அய்யா வழி விடுவாரு சொல்லி வரனும்.

சரி இந்த எருமை மாடுங்க வழிவிடாது சொல்லி தப்பி தவறி எக்ஸ்கியூஸ் மீ சொல்லிட கூடாது. ஏதோ அவரு பெட்ரூம்ல வந்து எக்ஸ்கியூஸ் மீ சொன்ன மாதிரி கேவலமா ஒரு லுக் விட்டு அப்புறம் இவரு வழிவிடுவாரு. உங்களுக்கு பின்னடி ரொம்ப பக்கத்துல செருப்பு சத்தம் கேட்ட கொஞ்சம் திரும்பி பாருங்க. யாராவது தொண்டைய செருமும் சப்தம் கேட்ட வழி விடுடா நாயே சொல்றாங்க புரிஞ்சிகிட்டு வழிய விட்டு தொலைங்க.

கேக்கனும் நினைச்சேன்... அது என்னடா குடிக்காமலே தோள் மேல கைய போட்டுகிட்டு ஆடி ஆடி நடக்கறிங்க?  என்னாது அது? அதான் லவ்வா? இல்லை இரண்டு பேரும் குடும்பத்தோட போய் குடிச்சிட்டு வறிங்களா? லெப்டல கொஞ்சம் வழி இருக்கே நாம ஓவர் டேக் பண்ணி போலாம் பார்த்தா அப்போ தான் இவரு லெப்ட்ல ஆடுவாரு. சரி.. ஏழரை லெப்ட்ல போய்டுத்தே சொல்லி நாம ரைட் எடுத்தா அப்போதான் இவரு ரைட்ல வருவாரு. 

இந்த பொழப்புக்கு ரமேஷ் மாதிரி மூனு பாட்டு லிங்க் போட்டு இதுவும் பதிவு நானும் பதிவரு சொல்லி காலத்த ஓட்டலாம். ஏன்னா உங்களை எல்லாம் கேரளாவுல கூட அடிமாட சேர்த்துக்க மாட்டாங்க.

.

Sunday, February 06, 2011

டேமேஜர்.... கிர்ர்ர்ர்ர்

கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் மேனேஜர். எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல கார்ல ஏறி உக்கரது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல என்ன கேள்வி கேக்கலாம் யோசிக்கிறது. உள்ள வந்ததும் ஒரு வேலை கொடுப்பாரு அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள ஒரு நிமிஷம் இங்க வாங்க சொல்லுவாரு. அரை மணி நேரம் ப்ளேடு போடுவாரு. சரி சீட்டுக்கு போங்க சொல்லுவாரு. அடுத்த அஞ்சி நிமிஷத்துல. ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா... அரை மணி நேரமா என்னாங்க பண்ணிங்க? அப்போ வரும் பாருங்க கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னாடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்.

சின்ன லெவல்ல இருந்து படிப்படியா உழைச்சி மேல வந்தவன் எல்லாம் ரொம்ப ஆட மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி MBA முடிச்சிட்டு நேரா மேனேஜர் சீட்டுல உக்கார்ர அறிவாளிகள் இருக்காங்க பாருங்க. அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவனாவது வாயில நொழையாத ஒரு வெள்ளைகாரன் பேர சொல்றது. அவன் என்ன சொல்லி இருக்கான் சொல்லி தெரியுமா கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு என்ன சொல்லி இருந்தா எனக்கு என்ன? அப்படி என்னடா கருத்து சொல்லி இருக்காரு கேட்ட மரம் வெட்ட ஒரு மணி நேரம் கொடுத்தா அதில் 30 நிமிடம் கோடாலிய கூர்படுத்த செலவு செய்யனுமாம். அது மாதிரி வேலை செய்யரதுக்கு முன்னடி ப்ளான் பண்ணி செய்யனுமாம். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண மரம் வெட்டரவன் தினம் செய்யரது. இந்த விஷயத்த ஒரு வெள்ளகாரன் சொல்லுவான் அதை இந்த வெளக்கெண்னை ஆயிரம் ரூபாய் கொடுத்து புக்க வாங்கி படிச்சிட்டு வந்து பெரியா ராக்கெட் விஞ்ஞானி ரேஞ்சிக்கு பேசும்.

அது மாதிரி மீட்டிங் வச்சி வேலை நேரத்துல வெட்டியா எதாவது பேசும். போன வாரம் ஏன் நீங்க அதை தப்பா பண்ணிங்க? சாரி சார் தெரியாம நடந்து போச்சி இனி கவனமா இருக்கேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் இனி செய்ய மாட்டிங்க அது வேற விஷயம். அப்போ ஏன் தப்பு செஞ்சிங்க? நாம பதில் சொன்னாலும் ஒத்துக்காது. சும்மா கூட கூட பேசாதிங்க. தப்பு செஞ்சிட்டு எதிர்த்து வேற பேசறிங்க அப்படினு திட்டும். நான் எங்கடா நாயே எதிர்த்து பேசினேன்? நான் பேச ஆரபிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.

என் நண்பன் நரி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா முழு விபரம் கொடுங்க. அரை குறையா டீடேய்ல் சொல்ல வேண்டியது அப்புறம் ஏன் தப்பா செஞ்ச திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா செய்விங்க சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா வேணும் கரைக்டா கேப்ப? தப்பி தவறி அவரு முக்க உடைச்சிடிங்க அவ்வளவு தான் உங்களை பார்த்து நக்கலா இரு சிரிப்பு சிரிப்பாரு. அதுக்கு அர்த்தம் அப்ரைசல் வரட்டும் உனக்கு ஆப்பு வைக்கிறேன்.

இந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை வச்சி சிங்கத்த எல்லாம் நாய் மாதிரி குரைக்க சொல்லுது. ஜால்ரா போடற நாய் எல்லாம் சிங்கம்னு சொல்லி எல்லார் முன்னாடி பாராட்டுது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....

இந்த லூசுகளுக்கு மேல ஒரு பெரிய லூசு இருக்கும் அந்த லூசு மாச மாசம் இந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். நம்ம லூசு கரைக்டா ரிப்போர்ட் பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). நம்ம கிட்ட வந்து இந்த ரிப்போர்ட் வேனும் சொல்லும். நாமலும் கேனதனமா இவன் பண்ண கொடுமை எல்லாம் மறந்து ராத்திரி பகலா கஷ்ட்டபட்டு ரெடி பண்ணி கொடுப்போம். நம்ம முன்னாடியே அதை கொண்டு கொடுக்கும். பெரிய லூசு சொல்லும் Well done! you did a wonderful job. u all should take him as a example அப்படினு பாரட்டும். இந்த நாய் வாய் எல்லாம் பல்லா சிரிக்கும் வாய் தவறி கூட நான் பண்ணல அதோ ஒரு கேணை நிக்கிறன் பாரு அவன் தான் பண்ணான் சொல்லாதூ. ஆனா ஏதாவது தப்பு இருக்கே கேட்டா அதே மீட்டிங்ல என்னாங்க பார்த்து பண்ண மாட்டிங்களா கேக்கும்.

மேனேஜர்கள் பற்றி பல ப்ளாக் அறிஞர்கள் கருத்து. மேனேஜர் எல்லாம் வைக்க போர்ல படுத்து கிடக்கிற நாய் மாதிரி விட்டு தள்ளுங்க. விட்றா மச்சா அவன் தண்ணி குடிக்கிர அப்போ தொண்டை அடச்சி சாவான். ஒரு நாள் பூமா தேவி சிரிக்க போறா மேனேஜருங்க மட்டும் உள்ள போக போறானுங்க இப்படி பல கருத்துகள்.

ரமேஷ் & மாலுமி : எண்டா நாயே! பன்னி, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உங்களுக்கு (இவனுங்க இரண்டு பேரும் மேனேஜர்)

டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள மேனேஜர் இருக்கலாம் அவர்களுக்கு திட்டுவிலக்கு அறிக்க படுகிறாது.

.