Sunday, February 06, 2011

டேமேஜர்.... கிர்ர்ர்ர்ர்

கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் மேனேஜர். எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல கார்ல ஏறி உக்கரது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல என்ன கேள்வி கேக்கலாம் யோசிக்கிறது. உள்ள வந்ததும் ஒரு வேலை கொடுப்பாரு அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள ஒரு நிமிஷம் இங்க வாங்க சொல்லுவாரு. அரை மணி நேரம் ப்ளேடு போடுவாரு. சரி சீட்டுக்கு போங்க சொல்லுவாரு. அடுத்த அஞ்சி நிமிஷத்துல. ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா... அரை மணி நேரமா என்னாங்க பண்ணிங்க? அப்போ வரும் பாருங்க கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னாடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்.

சின்ன லெவல்ல இருந்து படிப்படியா உழைச்சி மேல வந்தவன் எல்லாம் ரொம்ப ஆட மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி MBA முடிச்சிட்டு நேரா மேனேஜர் சீட்டுல உக்கார்ர அறிவாளிகள் இருக்காங்க பாருங்க. அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவனாவது வாயில நொழையாத ஒரு வெள்ளைகாரன் பேர சொல்றது. அவன் என்ன சொல்லி இருக்கான் சொல்லி தெரியுமா கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு என்ன சொல்லி இருந்தா எனக்கு என்ன? அப்படி என்னடா கருத்து சொல்லி இருக்காரு கேட்ட மரம் வெட்ட ஒரு மணி நேரம் கொடுத்தா அதில் 30 நிமிடம் கோடாலிய கூர்படுத்த செலவு செய்யனுமாம். அது மாதிரி வேலை செய்யரதுக்கு முன்னடி ப்ளான் பண்ணி செய்யனுமாம். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண மரம் வெட்டரவன் தினம் செய்யரது. இந்த விஷயத்த ஒரு வெள்ளகாரன் சொல்லுவான் அதை இந்த வெளக்கெண்னை ஆயிரம் ரூபாய் கொடுத்து புக்க வாங்கி படிச்சிட்டு வந்து பெரியா ராக்கெட் விஞ்ஞானி ரேஞ்சிக்கு பேசும்.

அது மாதிரி மீட்டிங் வச்சி வேலை நேரத்துல வெட்டியா எதாவது பேசும். போன வாரம் ஏன் நீங்க அதை தப்பா பண்ணிங்க? சாரி சார் தெரியாம நடந்து போச்சி இனி கவனமா இருக்கேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் இனி செய்ய மாட்டிங்க அது வேற விஷயம். அப்போ ஏன் தப்பு செஞ்சிங்க? நாம பதில் சொன்னாலும் ஒத்துக்காது. சும்மா கூட கூட பேசாதிங்க. தப்பு செஞ்சிட்டு எதிர்த்து வேற பேசறிங்க அப்படினு திட்டும். நான் எங்கடா நாயே எதிர்த்து பேசினேன்? நான் பேச ஆரபிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.

என் நண்பன் நரி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா முழு விபரம் கொடுங்க. அரை குறையா டீடேய்ல் சொல்ல வேண்டியது அப்புறம் ஏன் தப்பா செஞ்ச திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா செய்விங்க சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா வேணும் கரைக்டா கேப்ப? தப்பி தவறி அவரு முக்க உடைச்சிடிங்க அவ்வளவு தான் உங்களை பார்த்து நக்கலா இரு சிரிப்பு சிரிப்பாரு. அதுக்கு அர்த்தம் அப்ரைசல் வரட்டும் உனக்கு ஆப்பு வைக்கிறேன்.

இந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை வச்சி சிங்கத்த எல்லாம் நாய் மாதிரி குரைக்க சொல்லுது. ஜால்ரா போடற நாய் எல்லாம் சிங்கம்னு சொல்லி எல்லார் முன்னாடி பாராட்டுது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....

இந்த லூசுகளுக்கு மேல ஒரு பெரிய லூசு இருக்கும் அந்த லூசு மாச மாசம் இந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். நம்ம லூசு கரைக்டா ரிப்போர்ட் பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). நம்ம கிட்ட வந்து இந்த ரிப்போர்ட் வேனும் சொல்லும். நாமலும் கேனதனமா இவன் பண்ண கொடுமை எல்லாம் மறந்து ராத்திரி பகலா கஷ்ட்டபட்டு ரெடி பண்ணி கொடுப்போம். நம்ம முன்னாடியே அதை கொண்டு கொடுக்கும். பெரிய லூசு சொல்லும் Well done! you did a wonderful job. u all should take him as a example அப்படினு பாரட்டும். இந்த நாய் வாய் எல்லாம் பல்லா சிரிக்கும் வாய் தவறி கூட நான் பண்ணல அதோ ஒரு கேணை நிக்கிறன் பாரு அவன் தான் பண்ணான் சொல்லாதூ. ஆனா ஏதாவது தப்பு இருக்கே கேட்டா அதே மீட்டிங்ல என்னாங்க பார்த்து பண்ண மாட்டிங்களா கேக்கும்.

மேனேஜர்கள் பற்றி பல ப்ளாக் அறிஞர்கள் கருத்து. மேனேஜர் எல்லாம் வைக்க போர்ல படுத்து கிடக்கிற நாய் மாதிரி விட்டு தள்ளுங்க. விட்றா மச்சா அவன் தண்ணி குடிக்கிர அப்போ தொண்டை அடச்சி சாவான். ஒரு நாள் பூமா தேவி சிரிக்க போறா மேனேஜருங்க மட்டும் உள்ள போக போறானுங்க இப்படி பல கருத்துகள்.

ரமேஷ் & மாலுமி : எண்டா நாயே! பன்னி, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உங்களுக்கு (இவனுங்க இரண்டு பேரும் மேனேஜர்)

டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள மேனேஜர் இருக்கலாம் அவர்களுக்கு திட்டுவிலக்கு அறிக்க படுகிறாது.

.

80 comments:

எஸ்.கே said...

கூடிய சீக்கிரம் மேனேஜராக வாழ்த்துக்கள்!:-)

எஸ்.கே said...

முக்காவாசி மேனேஜர்களுக்கு வேலையே ஒழுங்கா தெரியாதுன்னு சொல்றாங்க சிலபேர்! உண்மையா?

எஸ்.கே said...

//என் நண்பன் நரி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். //

அவர் பாவங்க. சரியான தூக்கமில்லாம திட்டு வாங்கிக்கிட்டு. சே குடும்ப நிலைமைக்காக எவ்வளவு மன அழுத்தம்!

எஸ்.கே said...

//தப்பி தவறி அவரு முக்க உடைச்சிடிங்க அவ்வளவு தான் உங்களை பார்த்து நக்கலா இரு சிரிப்பு சிரிப்பாரு. அதுக்கு அர்த்தம் அப்ரைசல் வரட்டும் உனக்கு ஆப்பு வைக்கிறேன்.

//

இது மட்டும் எல்லா இடத்திலும் நடக்கும். எளியோரை வலியோர் மிதித்தல்!

எஸ்.கே said...

மேனேஜர்கள் தன்னோட மேலதிகாரிகிட்ட நல்ல பேர் வாங்குறதுக்காக கீழ வேலை பாக்கிறவங்களை பயங்கரமா புழிஞ்செடுக்கிறாங்களாம். என் தம்பி சொன்னான்.!

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும்! ஆனால் இங்கே நீங்கள்தான் எப்போதும் தோற்பீர்கள்!

குட்நைட்!

Madhavan Srinivasagopalan said...

பின்புலம் பொருத்தமாக இல்லை..
அதனால் படிக்க முடியவில்லை..

Madhavan Srinivasagopalan said...

ஆனாலும் கமெண்டும், ஓட்டும் போடுவோம்.. நாங்க..
ஏன்னா.. நா ஒன்னோட 'நன்பேண்டா' !

கருடன் said...

@ஆல்

எல்லாரும் உங்க மேனேஜர மனசு விட்டு சந்தோஷமா திட்டுங்க. யாராவது சண்டைக்கு வந்தா நான் பார்த்துகிறேன். பட்டா, பன்னிகுட்டி, நரி எல்லரும் பொருள எடுங்கடா.... :)

Madhavan Srinivasagopalan said...

//TEROR-PANDIYAN(VAS) கூறியது...@ஆல்
"எல்லாரும் உங்க மேனேஜர மனசு விட்டு சந்தோஷமா திட்டுங்க. யாராவது சண்டைக்கு வந்தா நான் பார்த்துகிறேன். பட்டா, பன்னிகுட்டி, நரி எல்லரும் பொருள எடுங்கடா. :) //

யாருடா அது.. ஆளில்லா தீவுல வந்து கூவுறது.. போய் படுங்கப்பு.. மத்ததலாம் காலைல பாத்துக்கலாம்

கருடன் said...

@மாதவன்

//யாருடா அது.. ஆளில்லா தீவுல வந்து கூவுறது.. போய் படுங்கப்பு.. மத்ததலாம் காலைல பாத்துக்கலாம் //

நான் தாங்னா கடை ஓனரு.... இதோ கிளம்பிட்டேன்னா... காலையில லேட்டா போனா மேனேஜர் திட்டுவாருனா.... :)

அனு said...

ஹிஹி..வீட்டுக்கு வீடு வாசப்படி..

(புது டெம்ப்ளேட்ல படிக்குறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு..)

புதியஜீவன் said...

என்ன மச்சி அடி பலமோ?!

வினோ said...

என்ன ஆச்சுங்க தல... எவன் மேல இருக்கிற கோவம்...

புதியஜீவன் said...

//ஹிஹி..வீட்டுக்கு வீடு வாசப்படி..
//

ஏனுங்க வேல போட்டுத்தார்ரேன்னு சொல்லிப்ப்போட்டு எங்கனங்க போயிட்டீங்க?

புதியஜீவன் said...

//என்ன ஆச்சுங்க தல... எவன் மேல இருக்கிற கோவம்../
ஆணி புடுங்குறேன்னு மச்சி வெரல புடுங்கிட்டாருப்பா

கணேஷ் said...

என்னங்க எழுதியிருக்கிற நடையை பார்த்தா அடி பலம் போல இருக்கே)))

கவலை படாதிங்க நீங்களும் ஒருநாள் மேனேஜர் ஆக வரும்போது உங்களுக்கு யார் திட்டு விலக்கு அளிக்கிரங்கன்னு பாப்போம்))))

தினேஷ்குமார் said...

பொறந்தாலும் ஆம்பளையா பொறக்க கூடாது அப்படி பொறந்துபுட்டா நடுமத்தில படிக்க கூடாது ....

என்ன மாம்ஸ் சரியா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன மச்சி இந்த ஒட்டகம் மேய்க்கிற வேலையும் புட்டுக்குச்சா? சோத்துக்கு என்ன பண்ணுவ? சரி வா எங்க வீட்டுல நாயை கழுவுற வேலை போட்டு தரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ நாயே ஒழுங்கா வேலைய பார்த்த மேனேஜர் ஏன் திட்ட போறான். நீ பாதிநேரம் அந்த பிகரோட கடலை போட்டுக்கிட்டு இருந்தா மேனேஜர் கொஞ்சுவானா?

வெங்கட் said...

@ அனு.,

// ஹிஹி..வீட்டுக்கு வீடு வாசப்படி.. //

இவங்களும் மேனேஜராம்பா..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// சரி வா எங்க வீட்டுல நாயை
கழுவுற வேலை போட்டு தரேன்//

அப்ப உங்க வீட்ல இன்னொரு நாய்
வேற இருக்கா..!? EGO Problem எல்லாம்
இல்லையே உங்களுக்குள்ள..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் கூறியது...

@ ரமேஷ்.,

// சரி வா எங்க வீட்டுல நாயை
கழுவுற வேலை போட்டு தரேன்//

அப்ப உங்க வீட்ல இன்னொரு நாய்
வேற இருக்கா..!? EGO Problem எல்லாம்
இல்லையே உங்களுக்குள்ள..?//

ஓ டெரர் வேலைக்கு சேர்ந்தா ரெண்டு நாய் ஆகிடும்ன்னு சொல்ல வரீங்களா? தெளிவா சொல்லனும்ல

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நீ பாதிநேரம் அந்த பிகரோட கடலை
போட்டுக்கிட்டு இருந்தா மேனேஜர்
கொஞ்சுவானா?/

இவரு கடலை போடுற பிகரை
மேனேஜர் ஏன் கொஞ்சணும்..?? # டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் கூறியது...

@ ரமேஷ்.,

// நீ பாதிநேரம் அந்த பிகரோட கடலை
போட்டுக்கிட்டு இருந்தா மேனேஜர்
கொஞ்சுவானா?/

இவரு கடலை போடுற பிகரை
மேனேஜர் ஏன் கொஞ்சணும்..?? # டவுட்டு///

என்ன டெரர் உஷார் பண்றது மேனேஜரோட பிகர்தான். அதான் மேனேஜர் இவரோட வேலைக்கு ஆப்பு வச்சிட்டான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கேடிவியில் ரோஜா போட்ட ஆட்டத்தைப் பார்க்கிறேன். என்ன ஒரு கலை, என்ன ஒரு அலை, என்ன ஒரு தலை...? இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பன்னி என்று சொல்ல முடியவில்லை,அதனால் சேனலை மாற்றினேன், மாற்றினேன், மாற்றினேன், ரிமோட்டின் பேட்டரி முடியும் வரை மாற்றினேன். FTV வந்ததும் திறுத்தினேன், அதிலே பசங்கள்லாம் வரிசையாக நடந்தான்கள், சே... ரிமோட்டை தூக்கி வீசினேன், விழுந்தவுடன் வந்தது ஜெமினி டீவி, விடியும் வரை பார்த்தும் அதில் வரவில்லை ஜெமினி கணேசன்... சோடா ப்ளீஸ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரும்பவும் சன் டிவியை வைத்தேன், எங்கேயும் எப்ப்போதும்... என்று தனுஷ், ரம்யாவுடன் இழைந்து கொண்டிருந்தார், ரம்யாவைப் பார்க்க பார்க்க அந்த ரம்யா கிருஷ்ணன் ஞாபகம் வந்ததால் ஆசையுடன் மறுபடி ரிமோட்டைச் சுழற்றினேன். எதுவும் கிடைக்கவில்லை. சன் மியூசிக்கில் நான் ஆளான தாமரை ரீமிக்ஸ் குமுறிக்கொண்டிருந்தது. ஹீரோயின் முஞ்சி எங்கேயோ பார்த்தமாதிரியே இருந்தது, சட்டென ஞாபகம் வரவில்லை, எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என பாடல் முடியும் வரை தொடர்ந்து பார்த்தேன்,முடியவில்லை, ஓ..அந்தப் படம் பேர் ஞாபகம் வந்துவிட்டது அது சித்து +2 என நினைக்கிறேன், 2 ஹீரோயின்கல் வேறு ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்...... ம்றுபடியும் சோடா ப்ளீஸ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாம் ஓய்ந்துவிட்டது, ரிமோட்டை எடுத்து சேனலை மாற்ற ஆரம்பித்தேன்.... எங்கெங்கோ போய் இப்போ விஜய் டீவியில் டெலிஷாப்பிங் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி இந்த டெம்ப்ளேட்ல ஒண்ணுமே என்னால படிக்க முடியல, இருந்தாலும் எழுதாதவன் எழுதியிருக்கியே, சும்மா எப்படி போறதுன்னு இன்னேரத்துல ஏதொ என்னால முடிஞ்சதை வெச்சி கமெண்ட் போட்டிருக்கேன். அட்ஜஸ்ட் பண்ணிக்க...... (மத்த பயலுக கமெண்ட் எதையும் நம்பாதே, எதையுமே படிக்க முடியலேன்னு, சும்மா குத்துமதிப்பா டைட்டில வெச்சு கமெண்ட்டு போட்டிருக்கானுக....!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி நாங்கள்லாம் விடாம மழை பேஞ்சாலும் கடமைன்னு வந்துட்டா அது என்னய்யா அது... ஆங்... கவரிமானு மாதிரி, எதுவுமே புரியலின்னாலும் ஓட்ட போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம்... ஓகே, காலைல வந்து மீதிய பார்ப்போம்!

Anonymous said...

//////// டேமேஜர்.... கிர்ர்ர்ர்ர் ///////

மச்சி டாஏய் .......,உன் கால்ல விழுந்து கதற கதற நன்றி சொல்றேண்ட இந்த நரி !!!! நாளைக்கி எங்க அண்ணனா திருப்பதி அனுபிச்சிட்டு ..,இங்க நான் லட்டு தரேன் ..,

@ஆல்

மேனேஜர் ஆ இருக்கறவங்க தயவு செய்ஞ்சு ஓடி போய்டுங்க !!! சிலம்பத்தை சுத்திக்கிட்டு வரான் இந்த நரி

Anonymous said...

//// எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? ////

லாப் டாப் யூஸ் பண்ண தெரியாத பசங்க இந்த டேமேஜர் சனியன் புடிச்சவன்

Anonymous said...

///// காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது./////

தக்காளி அவங்களாச்சும் நேர்ல திட்டுற பாக்கியம் இருக்குது ..,_______தா எங்களுக்கு..!!!! ஒரு மசுரும் தெரியாம 12500 rs இன்சென்டிவ்

Anonymous said...

////// அதே கோவத்துல கார்ல ஏறி உக்கரது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல என்ன கேள்வி கேக்கலாம் யோசிக்கிறது./////

யோசிக்கறதா !!!!! அவனுங்களுக்கு கக்கா போவும் போது கூட நரியா என்ன கேள்வி கேக்காலாம் அவன எந்த ஊருக்கு அனுப்பலாம்னு யோசிக்கிறான் சொறி பிடிச்ச மொன்ன நாய்!!!!! இதுல வேற IIT GRADUATE வாம் ...,

டேய் மேனஜேர் !!!!

இப்போ சொல்றேண்டா ..,தக்காளி உன்ன நான் பெரிய பிரச்சனைல மாட்டி விடல ..,தக்காளி என் பேரு நரி இல்லடா

Anonymous said...

////// ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா... அரை மணி நேரமா என்னாங்க பண்ணிங்க? ////

இதே கொஸ்டீன் அ அந்த எடுபட்ட பய மெயில் ல கேப்பான் மச்சி ..,அதுவும் CC ல என்னக்கு அப்ரைசல் போடுறவங்க முதற்கொண்டு
எல்லாருக்கும் போடுவான் ..,

Anonymous said...

////// ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னாடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்.////

நாட்டியாமா !!!! _________________ தப்பாங்குத்து தான் மச்சி .

Anonymous said...

டேய் ! மேனேஜர் !!!! இப்ப ஒரு வேலை இருக்குது வக்காலி நாளைக்கி நீ பொணம் தாண்டி ...,

Chitra said...

மேனேஜர்கள் பற்றி பல ப்ளாக் அறிஞர்கள் கருத்து. மேனேஜர் எல்லாம் வைக்க போர்ல படுத்து கிடக்கிற நாய் மாதிரி விட்டு தள்ளுங்க. விட்றா மச்சா அவன் தண்ணி குடிக்கிர அப்போ தொண்டை அடச்சி சாவான். ஒரு நாள் பூமா தேவி சிரிக்க போறா மேனேஜருங்க மட்டும் உள்ள போக போறானுங்க இப்படி பல கருத்துகள்.


.......கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க.... ஹா,ஹா,ஹா,ஹா, ...உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு!

அன்பரசன் said...

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@ஆல்

எல்லாரும் உங்க மேனேஜர மனசு விட்டு சந்தோஷமா திட்டுங்க. யாராவது சண்டைக்கு வந்தா நான் பார்த்துகிறேன். பட்டா, பன்னிகுட்டி, நரி எல்லரும் பொருள எடுங்கடா.... :)//

நம்ம கோட்டா ஏற்கனவே முடிஞ்சுதுங்க....

வைகை said...

சின்ன லெவல்ல இருந்து படிப்படியா உழைச்சி மேல வந்தவன் எல்லாம் ரொம்ப ஆட மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி MBA முடிச்சிட்டு நேரா மேனேஜர் சீட்டுல உக்கார்ர அறிவாளிகள் இருக்காங்க ///////

இது நம்ம சிரிப்பு போலிஸ் ரமேசுதானே?

வைகை said...

ரமேஷ் & மாலுமி : எண்டா நாயே! பன்னி, /////


இதுக்கு ஏன் நம்ம பன்னிய திட்டனும்? அவரும் டேமேஜரா?

வைகை said...

Madhavan Srinivasagopalan கூறியது...
ஆனாலும் கமெண்டும், ஓட்டும் போடுவோம்.. நாங்க..
ஏன்னா.. நா ஒன்னோட 'நன்பேண்டா' !///

பதிவ படிக்காம ஓட்டு போட்டா டெரருக்கு கோவம் வரும்.....அதான் இப்ப படிச்சிட்டு கமென்ட் போடறேன்.....

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
மச்சி நாங்கள்லாம் விடாம மழை பேஞ்சாலும் கடமைன்னு வந்துட்டா அது என்னய்யா அது... ஆங்... கவரிமானு மாதிரி, எதுவுமே புரியலின்னாலும் ஓட்ட போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம்... ஓகே, காலைல வந்து மீதிய பார்ப்போம்!///

எதுல பன்னி ஓட்டைய போடுவிங்க? அப்பறம் அத ஏன் காலைல வந்து பாக்கணும்?

ரசிகன் said...

நல்ல அப்ரைசல் வாங்கணும்னா 3 காதும் 2 வாயும் இருக்கணும்.
எதுக்கா.. மேனேஜரோட பிரச்சனைகளை கேட்கவும், உச்சு கொட்டி,ஆமாம் போடவும் தான்.
அப்புறம் ஒவர் டைம் பாத்து வேலயையும் முடிக்கணும்.
என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு வேலய மட்டும் பாத்தா, அப்புறம் இப்படி ப்ளாக் போட்டு புலம்ப வேண்டியதுதான்.

இம்சைஅரசன் பாபு.. said...

ரமேஷ் & மாலுமி கவலை படாதீங்க பய புள்ள நைட் தண்ணிய போட்டுட்டு வந்து வாந்தி எடுத்திருக்கு ...........

Jey said...

பாண்டி, என்ன ராசா, செமத்தியா வாங்குன எஃபெக்ட் தெரியுதே, சரி ...விட்றா...விட்ரா..., நம்மகிட்ட மாட்னது நம்ம சிப்புதான், வேணும்னா, இதை பொங்கவச்சி ஊருக்கு பரிமாறிடலாமா....

சௌந்தர் said...

ஒரு வீரனுக்கு இது சகஜம்....

karthikkumar said...

எனக்கும் நல்லா திட்டணும்னு தோணுது மாம்ஸ். ஆனா எங்க ஆபீஸ்ல மேனேஜரே இல்லையே என்ன செய்ய??

பெசொவி said...

49

பெசொவி said...

vadai

பெசொவி said...

உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையோ, தம்பி? அதான் இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணிகிட்டிருக்கே!

செல்வா said...

// ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னாடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்.
//

நீங்க ரமேஷ் அண்ணன சொல்லுறீங்களா ?

செல்வா said...

//இந்த விஷயத்த ஒரு வெள்ளகாரன் சொல்லுவான் அதை இந்த வெளக்கெண்னை ஆயிரம் ரூபாய் கொடுத்து புக்க வாங்கி படிச்சிட்டு வந்து பெரியா ராக்கெட் விஞ்ஞானி ரேஞ்சிக்கு பேசும்.//

ஹி ஹி .. உண்மைதான் ..

செல்வா said...

மேனேஜர்கள் வாழ்க .. ஹி ஹி

மாலுமி said...

யோவ் Terror நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துகிட்டு வார வாரம் நாலு சொவருகுள்ள யாருக்கும் தெரியாம அடி அப்புறம் $%$^&%$# எல்லாம் வாங்கீட்டு இருக்குறேன்......... உனக்கு ஏன்டா கடுப்பு...... என் அடி நீ வாங்கி பார்...... யோவ் ராமேசு குவட்டேர் ஒன்னு சொல்லு.......

மாலுமி said...

இந்த லூசுகளுக்கு மேல ஒரு பெரிய லூசு இருக்கும் அந்த லூசு மாச மாசம் இந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். நம்ம லூசு கரைக்டா ரிப்போர்ட் பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்).
-------------------------
யோவ் இது நானா ரமேஷுசா ?????????????
ஒழுங்கா சொல்லு............

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள மேனேஜர் இருக்கலாம் அவர்களுக்கு திட்டுவிலக்கு அறிக்க படுகிறாது.
//

டேங்ஸ் மச்சி....

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

அள்ளிட்டீங்க போங்க..அத்தனையும் உண்மை..
எஞ்சினியர்களின் மனக்குமுறல்கள்னு ..
நானும் ஒரு பதிவு ரெடி பண்ணி ரொம்ப நாளா ட்ராப்ட்லயே வச்சி இருக்கேன்..கூடிய சீக்கிரம் அதை போடுறேன்..இப்போ போட முடியாதே...இது அப்ரைசல் விழும் காலம்...

மங்குனி அமைச்சர் said...

ஹி,ஹி,ஹி,............பயபுல்லையா நல்லா மந்திரிச்சு விட்டாணுக போல

மங்குனி அமைச்சர் said...

ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னாடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்.///

என்ன டெர்ரர் இவ்ளோ கவுரமா திட்டுற ??? நம்ம மரியாத என்னாகிறது ......

மங்குனி அமைச்சர் said...

மச்சி நான் இதுக்குத்தான் அப்பவே சொன்னே ...... போஸ்டர் ஓட்டுற காண்ட்ராக் எடுத்திருக்கண்டா உண்டனே வேலைய ரிசைன் பண்ணிட்டு வான்னு கேட்டியா , கேட்டியா , கேட்டியா ???

G.M Balasubramaniam said...

கோபம் உண்டாகும் போது, குறைத்துக்கொள்ள, ஆத்திரத்தை அடக்க பன்சிங் பேக் என்று உண்டாம். அது இல்லாதவர்களுக்கு வலைப்பூவா.? பாவம் மேனேஜர்கள் ..

Madhavan Srinivasagopalan said...

பின்புலத்த வெள்ளையாக மாற்றிய டேரருக்கு நன்றி..
இப்போது படிக்க முடிந்தது..

சி.பி.செந்தில்குமார் said...

mr pandian pls post monthly once atleast

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

mr pandian pls post monthly once atleast///

அவர் போன் தான் பண்ணுவாரு. மாச மாசம் போஸ்ட் போடுறதுக்கு அவர் என்ன கலைஞரா? இல்ல போஸ்ட்மேனா?

அருண் பிரசாத் said...

என்ன மச்சி ஓவர் ஃபீலிங்க்ஸ்?

Anonymous said...

ம் வெளங்கிடுச்சு.

பாரதசாரி said...

சிலப் பேரு நானும் பாத்திருக்கேன் தல, சப்பத்திய கூட ஸ்பூன்ல தான் சாப்டுவானுங்க, கேட்டா 'நான் மேனேஜர்' ம்பானுங்க.அப்பல்லாம் நான் நெனசிக்குவேன், "தெருவுல வெறி நாய் தொரத்தும் போது 'நான் மேனேஜர்'ன்னு சொல்லிப்பாருடா கிறுக்குபய புல்ல"ன்னு.

இதைத் தொடர்பதிவாக பதிவேற்ற வேண்டிக்கேட்டுகொள்கிறேன், அதென்னவோ இவனுங்கல திட்டினா சும்மா குளூகோஸ் சாப்டாமாதிரி ஒரு எனர்ஜீ :-)

Unknown said...

:)

இராஜராஜேஸ்வரி said...

திட்டுவிலக்கு அறிக்க படுகிறாது.//
we know your feelings.

சாமக்கோடங்கி said...

யோவ் டெரர் ...

என்னையா காண்டு..

ஏதோ பிரச்சினை நடந்து இருக்கு..
ஆனா பார்த்துப்பா.. யாராவது உங்க ஆபீஸ்ல இந்தப் பதிவைப் பார்த்துடப் போறாங்க..

Unknown said...

அண்ணன் டேர்றோர் பாண்டியனை
கடந்த இரண்டு மூன்று மாதங்களாக காணவில்லை

Unknown said...

உண்மைல இது சோகம்! ஆனா என்னால சிரிக்கறத நிறுத்த முடியல ஹி ஹி!

Anonymous said...

மத்த பயலுக கமெண்ட் எதையும் நம்பாதே, எதையுமே படிக்க முடியலேன்னு, சும்மா குத்துமதிப்பா டைட்டில வெச்சு கமெண்ட்டு போட்டிருக்கானுக....!//
-;))

Anonymous said...

எனக்கு விளங்கிடுச்சி ராணா வுல குஷ்பூ நடிக்கலையாம்

Anonymous said...

அரை மணி நேரமா என்னாங்க பண்ணிங்க? //
இன்னும் ஒரு பேராதான் இருக்கு ..பதிவு தேத்த விட மாட்டானே?

Anonymous said...

சாரி சார் தெரியாம நடந்து போச்சி இனி கவனமா இருக்கேன். //
கொடுமை இன்னும் ஸ்கூல் வாழ்க்கைதானா?

கருடன் said...

@ஆல்

ஹச்.. ஹச்.. ப்ளாக்ல ஒரே தூசியா இருக்கு. போஸ்ட் போட்டு ஒரு மாசமாச்சி இதுக்கு மேல கமெண்ட்ஸ் ரிப்ளை போடனுமா என்ன? யார்டா அவன் அங்க காறி துப்பரது? கண்டிப்பா ரிப்ளை போடனும் சொன்னா சொல்லுங்க திருப்பி துப்பிடலாம். ச்சீ பதில் போட்டுடலாம்.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னும் 1 மணிநேரத்திற்குள் பதில் போடவில்லையென்றால் இன்னும் கேவலமாகக் கிழிக்கப்படும்

மதுரை சரவணன் said...

menagerkalai mirattum intha pathivai virumbi aatharikkiren...vaalththukkal